Thiruppugazh Song 55 – திருப்புகழ் பாடல் 55

திருப்புகழ் பாடல் 55 – திருச்செந்தூர்

தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா தந்தனத் …… தனதான

சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்
சந்தமோ கின்பமுத் …… தெனவானிற்

றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
பென்றுதாழ் வொன்றறுத் …… துலகோரைத்

துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
கொண்டுதாய் நின்றுரைத் …… துழலாதே

துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்
தொண்டினா லொன்றுரைக் …… கருள்வாயே

வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத்
துண்டுமே லண்டருக் …… கமுதாக

விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்
குண்டுபே ரம்பலத் …… தினிலாடி

செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்
தின்கணா டுந்திறற் …… கதிராழித்

திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் …… பெருமாளே.