Thiruppugazh Song 169 – திருப்புகழ் பாடல் 169

திருப்புகழ் பாடல் 169 – பழநி

தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன …… தனதான

தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு …… துணர்தேனே

சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தா஡ணரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக …… மயலானேன்

ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி …… யுனையோதேன்

ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லர்முட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் …… தருவாயே

மாகமுக டோ டகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது …… கடைநாளில்

வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய …… மருகோனே

மேகநிக ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன …… துளமேவும்

வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் …… பெருமாளே.