Thiruppugazh Song 180 – திருப்புகழ் பாடல் 180

திருப்புகழ் பாடல் 180 – பழநி

தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த …… தனதான

மந்தரம தெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மண மதுவே துலங்க …… வகைபேசி

மன்றுகமழ் தெருவீ திவந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை யருகே யணைந்து …… தொழில்கூறி

எந்தளவு மினிதா கநம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
யின்பமருள் விலைமாதர் தங்கள் …… மனைதேடி

எஞ்சிமன முழலாம லுன்றன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையு மினிதாள இன்று …… வரவேணும்

விந்தையெனு முமைமா துதந்த
கந்தகுரு பரதே வவங்க
மென்றவரை தனில்மேவு மெந்தை …… புதல்வோனே

மிஞ்சுமழ கினிலே சிறந்த
மங்கைகுற மடமா துகொங்கை
மென்கிரியி லிதமா யணைந்த …… முருகோனே

சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து
வந்தனைசெய் சரணார விந்த
செந்தமிழ் லுனையே வணங்கு …… குருநாதர்

தென்றல்வரை முநிநாத ரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த …… பெருமாளே.