Thiruppugazh Song 204 – திருப்புகழ் பாடல் 204

திருப்புகழ் பாடல் 204 – சுவாமி மலை

தனாதனன தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் …… தனதான

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும் …… விழியாலும்

இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும் …… இளைஞோர்நெஞ்

சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை கூறும் …… மடவாரன்

படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானந் …… தருவாயே

குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
குலாவியினி தோதன் …… பினர்வாழ்வே

குணாலமிடு சூரன் பணாமுடிக டோ ருங்
குடாவியிட வேலங் …… கெறிவோனே

துராலுமிக தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்வினை யோடும் …… படிநூறுஞ்

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் …… பெருமாளே.