Thiruppugazh Song 209 – திருப்புகழ் பாடல் 209

திருப்புகழ் பாடல் 209 – சுவாமி மலை
ராகம் – கமாஸ், தாளம் – அங்கதாளம் (5 1/2)

தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
தனனா தனத்த தந்த …… தனதான

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த …… தெடைமாலை

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட …… கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து …… பணிவோனே

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க …… ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த …… பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து …… வரவேணும்

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க …… ணுறலாமோ

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த …… பெருமாளே.