Thiruppugazh Song 229 – திருப்புகழ் பாடல் 229

திருப்புகழ் பாடல் 229 – சுவாமி மலை

தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த …… தனதான

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு …… நெறிசேர்வார்

மலைய வேவ ளைத்த சிலையி னு஡டோ ளித்த
வலிய சாய கக்கண் …… மடமாதர்

இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து …… விடுமாறு

இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப …… தொருநாளே

அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து …… மயில்வீரா

அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு …… மிளையோனே

மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி …… லுறைவோனே

விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த …… பெருமாளே.