Thiruppugazh Song 249 – திருப்புகழ் பாடல் 249

திருப்புகழ் பாடல் 249 – திருத்தணிகை
ராகம் – மாயாமாளவகெளளை; தாளம் – ஆதி

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் …… தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் …… தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் …… பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் …… குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் …… தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் …… றவனீயே

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் …… புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் …… முருகோனே

தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் …… பெருமாளே.