Thiruppugazh Song 250 – திருப்புகழ் பாடல் 250

திருப்புகழ் பாடல் 250 – திருத்தணிகை
ராகம் – ஆனந்த பைரவி; தாளம் – திஸ்ரத்ருவம்
(திஸ்ர நடை) (16 1/2), (எடுப்பு – /3/3/3 0)

தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த …… தனதான

எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு …… வலிபோசா

இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு …… மிவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு …… மடியாதே

மருவி யின்றே னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி …… தரவேணும்

நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி …… முனைவேலா

நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு …… முருகோனே

தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு …… மணிமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட …… பெருமாளே.