Thiruppugazh Song 261- திருப்புகழ் பாடல் 261

திருப்புகழ் பாடல் 261 – திருத்தணிகை

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் …… தனதான

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் …… கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் …… றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் …… கடலு஡டே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் …… பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் …… தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் …… புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் …… சுனைமேவுந்

தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
தணியினிற் சரவணப் …… பெருமாளே.