Thiruppugazh Song 277- திருப்புகழ் பாடல் 277

திருப்புகழ் பாடல் 277 – திருத்தணிகை
ராகம் – செஞ்சுருட்டி/ஸஹானா
தாளம் – அங்கதாளம் (6 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான …… தனதான

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி …… யதனு஡டே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி …… தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி …… னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி …… விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு …… முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ …… அருள்வாயே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத …… பெருமாளே.