Thiruppugazh Song 306 – திருப்புகழ் பாடல் 306

திருப்புகழ் பாடல் 306 – குன்றுதோறாடல்
ராகம் – தோடி; தாளம் – அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்)

தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தந்தன தான தான தந்தன தான தான
தந்தன தான தான …… தனதான

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூது …… பலபாவின்

வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணி …… லழியாதே

செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர …… முகமாறும்

செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ …… லருள்வாயே

பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறு …… சமண்மூகர்

பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு …… தருவோனே

குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடி …… வெறியாடிக்

கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதோ றாடல் மேவு …… பெருமாளே.