Thiruppugazh Song 59 – திருப்புகழ் பாடல் 59

திருப்புகழ் பாடல் 59 – திருச்செந்தூர்
ராகம் – சுருட்டி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2

தானத் தானன தானத் தானன
தானத் தானன …… தந்ததான

சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும …… நந்தவேதா

தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக …… அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி …… கின்றமாயா

காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும …… தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு …… யங்ககால

நீலக் ஡ணபக லாபத் தேர்விடு
நீபச் சேவக …… செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு …… மங்கைபாலா

யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் …… தம்பிரானே.