Thiruppugazh Song 81 – திருப்புகழ் பாடல் 81

திருப்புகழ் பாடல் 81 – திருச்செந்தூர்
ராகம் – ரஞ்சனி; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் …… தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் …… பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் …… புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் …… திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் …… தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் …… துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் …… றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் …… தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் …… பெருமாளே.