Thiruppugazh Song 94 – திருப்புகழ் பாடல் 94

திருப்புகழ் பாடல் 94 – திருச்செந்தூர்
ராகம் – சங்கரானந்தப்ரியா; தாளம் – அங்கதாளம் (9)
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2

தானதன தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த …… தனதான

மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
முடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி …… யதிபார

மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற
முலபர யோக மேல்கொண் டிடாநின்ற …… துளதாகி

நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லு஡டு போயொன்றி வானின்க
ணாமமதி மீதி லு஡றுங்க லாஇன்ப …… அமுதூறல்

நாடியதன் மீது போய்நின்ற அநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற …… தொருநாளே

காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ …… டனல்வாயு

காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து …… தொழுமாது

வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை …… யிளையோனே

மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற …… பெருமாளே.