தீபாவளி எண்ணெய் குளியல் (கங்கா ஸ்நானம்) பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா?

தீபாவளி பண்டிகை தினத்தில் புத்தாடை, இனிப்பு பலகாரம், பட்டாசு ஆகியவற்றை தாண்டி, அன்று கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்ற முக்கிய சடங்கு உள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன, ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் (கங்கா ஸ்நானம்) தெரியுமா?

அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். தீபாவளி தினத்தை கங்கா ஸ்நானம் எனும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து தொடங்கி லட்சுமி பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்து வாழ்வின் அனைத்து பலன்களையும் பெறுவோம்.

தீபாவளியை எப்படி கொண்டாடுவது?

தீபாவளி தினத்தில் அதிகாலை அதாவது 3 முதல் 5.30 மணிக்குள் நாள் கங்கா ஸ்தானம் செய்ய வேண்டும். அதாவது எண்ணெய் குளியல் செய்தல் அவசியம் குறித்து இங்கு பார்ப்போம்…

கங்கையில் நீராடும் பாக்கியம்:

இந்த விரத நாளில் எண்ணெய், அரப்பு (சியக்காய்), வெந்நீர்.
எண்ணெய்யில் மகா லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, வெந்நீரில் கங்கா தேவி குடிகொண்டிருப்பாள். அதனால், அந்த நேரத்தில் நாம் எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும்.

இந்த தினத்தில் சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய்,சீயக்காய் வைத்து, எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, வீட்டின் பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும்.

அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து வருவது கங்கா ஸ்நானம் என்று பெயர்.

எண்ணெய் குளியலின் பலன்கள்:

நாம் தீபாவளி அன்று அதாவது அமாவசை தினத்தில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் உடலுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கின்றது. எண்ணெய் தேய்த்துக் கொண்டு கால் அல்லது அரை மணி நேரமாவது இளம் வெயிலில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் எண்ணெய் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

தீபாவளி தினத்தில் வழிபாடு செய்வது எப்படி?


நம் வீட்டில் பூஜை அறையில், 3 இலை போட்டு, நாம் செய்துள்ள இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அதோடு நாம் புதிதாக வாங்கி இருக்கும் உடைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அன்றைய தினம் கார்த்திகை தீபத்திற்குப் பயன்படுத்தும், தீப மண் அகல் விளக்கை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் அனைத்திலும் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். அல்லது ஒரே ஒரு தீபத்திற்காவது நெய்யில் ஏற்றலாம்.
வழிபடும் போது தீபங்களை ஏற்றி, மின் விளக்குகளை அனைத்து, தீப ஒளியில் இறைவனை வழிபடுதல் நல்லது.

பின்னர் புத்தாடைகளை அணிந்து, பெரியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பின்னர் நன்றாக உணவை சுவைத்து உண்டு விட்டு, வாங்கி வைத்திருக்கும் பட்டாசைப் பெரியோரின் முன் வெடித்து மகிழலாம்.
சிலர் குளித்த உடன் புத்தாடை அணிந்து சாமியை வணங்குவது வழக்கம். அப்படியும் செய்யலாம். பலகாரங்களை அக்கம் பக்கத்தினரிடம் பகிர்ந்து மகிழுங்கள்.
அசைவத்தைத் தவிர்க்கவும்:


அசைவ உணவை தவிர்த்தல் நல்லது

தீபாவளி பண்டிகை விரத தினம் என்பதால், அன்று அசைவ உணவை தவிர்த்தல் நல்லது.

தீபாவளி பண்டிகையில் செய்ய வேண்டியது:


ஆதரவற்றோர், வறுமையில் வாடுவோருக்கு உங்களால் முடிந்த அளவு உடைகள், உணவுகள் அளித்து அவர்களும் தீபாவளியை கொண்டாட உதவி செய்யுங்கள்.

இப்படி முறைப்படி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள். ஆண்கள் வாரந்தோறும் புதன், சனிக் கிழமையிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உங்களின் உடல் ஆரோக்கியம் கூடும்.

தற்போது உள்ள காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் குறைந்து வருவதால், குறைந்த பட்சம் தீபாவளி அன்றாவது எண்ணெய் தேய்த்துக் குளித்து கங்கா ஸ்நானம் செய்வது அவசியம்.