Vrathams for Lord Ganesha in Tamil

Here are some important Vrathams that can be observed for Lord Ganesha. The details are given below in Tamil for better understanding.

வைகாசி வளர்பிறை விரதம்

  • வைகாசி மாதம் வரும் முதல் வளர்பிறை  வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

செவ்வாய் விரதம்

  • ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்கு இவ்விரதம் இருந்து வழிபட, தோஷத் தடைகள் நீங்கும்.

சதுர்த்தி விரதம்

  • விநாயகர் வழிபாடுகளில் மிக முக்கியமானது சதுர்த்தி விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும்  சதுர்த்தி அன்று இருப்பது சதுர்த்தி விரதம் ஆகும். இந்த விரதம் இருப்பதால் காரியத்தடைகள் நீங்கி நல்வழி பிறக்கும்.

குமாரசஷ்டி விரதம்

  • கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயரும்  உண்டு.

தூர்வா கணபதி விரதம்

  • கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதம் இருப்பதால்  வம்சவிருத்தி உண்டாகும்.

சித்தி விநாயக விரதம்

  • சித்தி விநாயக விரதம் இருப்பதால், எதிரிகள் விலகி, காரியத் தடைகள் நீங்கி, நினைத்த  காரியங்கள் தடையின்றி வெற்றியடையும்.
  • புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்த்தசி திதியில் இவ்விரதம் இருக்க வேண்டும்.

தூர்வாஷ்டமி விரதம்

  • புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு தொடர்ந்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடுவது இவ்விரதத்தின் சிறப்பாகும். இந்த விரதம் கடைப்பிடிப்பதால் உடல் வலிமை உண்டாகும்.

நவராத்திரி விநாயகர் விரதம்

  • ஆவணி வளர்பிறை சதுர்த்தி தொடங்கி, தொடர்ந்து ஒன்பது நாட்கள் இருப்பது விநாயக நவராத்திரி விரதம் ஆகும்.

வெள்ளிப் பிள்ளையார் விரதம்

  • ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் விநாயகரை வேண்டிக் கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்க வேண்டும். இந்த விரத பூஜையை வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேற கடைப்பிடிக்கலாம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்

  • இன்வ்விரதத்தை ஆடி மாதம் செவ்வாயன்று இருக்க வேண்டும். இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைக்க வேண்டும். கன்று போடாத பசு சாணத்தால் பிள்ளையார் பிடித்து, புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும்.

அங்காரக சதுர்த்தி விரதபூஜை

  • இந்த விரதம் மாசி மாதம் வரும் முதல் தேய்பிறை செவ்வாய்க் கிழமை தொடங்கி, தொடந்து ஒரு வருடம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • இந்த விரதம் வறுமை நிலையில் இருக்கும் ஒருவரை பொருளாதார நிலையில் மேன்மையடையச் செய்யும்.

அங்காரக சதுர்த்தி விரதபூஜை கதை

  • பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார்.