Mahabharatham story in Tamil 50 – மகாபாரதம் கதை பகுதி 50

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 50

அவன் தன் இளையமகன் ருத்ரசேனனை அழைத்து, மகனே! ஒரு மானிடன் நம் நந்தவனத்தில் புகுந்து பட்சர்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறானாம். நீ சென்று அவன் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறான் என்பதை அறிந்து தகுந்த நிவாரணம் செய்துவா, என அனுப்பினான். ருத்ரசேனனும் அங்கு சென்று பீமனை சமாதானம் செய்து ,அவன் வந்த காரணத்தை தெரிந்து கொண்டான். பீமன் தன்னை கண்ணனின் மைத்துனன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மேலும், கோகுலத்தில் மரமாய் நின்ற குபேரனின் இரண்டு குமாரர்களை தங்கள் மைத்துனன் கண்ணன், உரலை இழுத்து வந்து சாபவிமோசனம் கொடுத்ததை நினைவுபடுத்தினான். (குபேரனின் பிள்ளைகள் தான் ஒரு சாபத்தால் மரமாக கோகுலத்தில் நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இது கேட்டு ருத்ரசேனன் மகிழ்ந்து, தங்கத்தாமரைகளைப் பறித்துக் கொடுத்தான்.

இதனிடையே தம்பியைக் காணாத தர்மர் வருத்தத்தில் இருந்தார். திரவுபதி மூலமாக அவன், குபேரபட்டினம் சென்றிருப்பதை அறிந்து, அவனுக்கு என்னாகுமோ என கலங்கவும் செய்தார். பீமனின் மகன் கடோத்கஜனை மனதால் நினைத்தார். அவன், அந்தக்கணமே அவர் முன்னால் தேருடன் வந்து நின்று பெரியப்பாவின் பாதம் பணிந்தான். மகனே! உன் தந்தைக்கு ஆபத்து. நாம் உடனே குபேரபட்டினம் சென்று அவனை மீட்டு வருவோம் என்றதும், தனது தேரில், நான்கே நாழிகையில் யட்சர்களின் இடத்தை அடைந்து விட்டான். அங்கு தம்பியைக் கண்ட தர்மர் அவனிடம் கோபித்துக் கொண்டார். தன்னிடம் தன்னிடம் அனுமதி பெறாமல் பீமன் வந்தது குறித்து கடிந்தார். பீமன் நல்லபிள்ளை போல் தலை குனிந்து நின்றான். பின்னர் அவனை அழைத்துக்கொண்டு காமியவனம் சேர்ந்தார். பெண்கள் எதைப் பார்த்தாலும் ஆசைப்படுபவர்கள். ஒரு பூவுக்கு ஆசைப்பட்டு, கணவனை குபேரபட்டினம் வரை செல்வதற்கு காரணமான திரவுபதி ஒருநாள் கானகத்தை அர்ஜுனனுடன் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஓரிடத்தில் ஒரு நெல்லிமரம் நின்றது. அதன் உச்சியில் ஒரு நெல்லிக்கனி பெரிய அளவில் பழுத்து அழகாகக் காணப்பட்டது. அது அமித்ரமுனிவர் என்பவருக்கு சொந்தமான மரம். அந்த பழம் 12 வருடங்களுக்கு ஒருமுறை தான் காய்க்கும். அதைச் சாப்பிட்டு தான் மகரிஷி உயிர் வாழ்கிறார்.

அந்த பழத்தின் தன்மை இன்னதென அறியாமல், அதன் அழகில் சொக்கிப்போன திரவுபதி, வில், வித்தையில் உலகிலேயே உயர்ந்த என் உத்தமரே! தாங்கள் எனக்கு அந்தப் பழத்தை பறித்து தாருங்கள், என்றாள். அர்ஜுனன் ஒரு சிறிய அம்பை எய்தான். அவ்வளவு தான். பழம் விழுந்தது. அது கீழே விழுந்தால் மணல் ஒட்டு விடக்கூடாது என்பதால், லாவகமாக கையில் பிடித்து மனைவியிடம் கொடுத்தான். அப்போது, அதைப் பார்த்து விட்ட அமித்ர முனிவரின் சீடர்கள் ஓடோடி வந்தனர். யார் நீங்கள்? இந்த பழம் அமித்ரமுனிவருக்குரியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுப்பது. இதைச் சாப்பிட்டே எங்கள் குருநாதர் உயிர் வாழ்கிறார். இப்போது இதைப் பறித்து விட்டனர். எங்கள் உங்களை சபிப் நீங்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவது உறுயாகி விடுகிறது என்றனர்.

திரவுபதி கலங்கி அழுதாள். உங்களுக்கு துன்பம் கொடுப்பதற்கென்றே இந்த பூமியில் பிறந்திருக்கி போலும், கணவர்கள் அவர்களில் ரையாவது சுக வாழவிட்டேனா? வருந்தினாள். பின்னர் தன் மற்ற கணவன்மாரை அழைத்து வந்தாள். அவர்கள் என்ன செய்வதென தெரியாமல் கலங்கி நின்ற வேளையில் சகாதேவன் சொன்னான். இக்கட்டான சமயங்களில் நமக்கு மைத்துனன் கண்ணனே உதவு. அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். கடந்த மாதம் துர்வாச முனிவர் இங்கு வந்திருந்த போது, அவருக்கு உணவளிக்க, திரவுபதியின் அட்சய பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரு பருக்கையை உண்டு, முனிவரின் வயிறு நிரம்பச்செய்த அதிசயத்தைக் கண்டோம். துர்வாசரை விட அமிர்த முனிவர் கோபக்காரர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவரிடம் இருந்து தப்ப வேண்டுமானால், கண்ணனைத் தான் அழைத்தாக வேண்டும் என்றான்.

தர்மர், அதுவே சரியென ஒப்புக்கொண்டு, இதயத்தால் கண்ணனை நினைத்தார். அந்த மாயவன் வந்து விட்டான். கண்ணனை ஏன் மாயவன் என்கிறோம் தெரியுமா? மாயவன் என்றால் எங்கும் வியாபித்திருப்வன் எனப் பொருள். அவன் நம் முன்னால் வர வேண்டுமானால், இதயத்தை அவனிடம் நிலைநிறுத்தி, வணங்கவேண்டும். நிச்சயம் அவன் வந்துவிடுவான். தர்மருக்கு அந்த சக்தி இருந்தது, அவன் வந்து விட்டான். சகாதேவனுக்கோ கண்ணன் தான் கதி. நடந்தாலும், உறங்கினாலும், சாப்பிட்டாலும் கண்ணனின் சிந்தனை தான்! சொல்லப்போனால் அவனை ஒரு ஆண் ராதை என்றே சொல்லலாம். பீமனும் அப்படிப்பட்டவனே. பீமன் கண்ணன் மீது கொண்டிருந்த அபாரபக்தியை யாரும் அறியமாட்டார்கள். தர்மர் கஷ்டத்தின் போது மட்டுமே அவனை சிந்திப்பார். கண்ணனை சிந்திக்காமல் அவரு பகடை உருட்டியதன் விளைவைத் தானே இப்போது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்! அர்ஜுனனும் நிலையும் ஏறத்தாழ அத்தகையதே! நகுலன் சிறந்த கிருஷ்ணன் பக்தனாயினும், அவரை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கும் அளவுக்கு சக்தியை அவன் பெறவில்லை.

தர்மர் மூலமே அவன் கண்ணனைத் தரிசிக்க இயலும். ஆனால் சகாதேவன் கிருஷ்ண பத்தியில் மிகமிக உயர்ந்தவன். கிருஷ்ணனோ சகாதேவனிடம் தான் யோசனை கேட்பார் பல விஷயங்களில். ஆனால், விடாக்கண்டனான சகாதேவன் அவரிடம் பிடி கொடுக்காமலே பேசுவான். பீமனுடைய பக்தி எப்படிப்பட்டது என்பதற்கு சிறு உதாரணம். பீமன் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யாமல் ஒருநாள் கூட சாப்பிட்டதில்லை. சாப்பிட உட்காரும் முன், உணவை இலையில் வைத்து, இரண்டு கைகளாலும் ஏந்தி, கிருஷ்ணா! வா, இதை ஏற்றுக் கொள் என்பான். கண்ணன் தினமும் கையேந்தி பெற்றுக் கொள்வார். ஒருநாள், அவனைச் சோதிப்பதற்காக அவர் வரவில்லை. பீமன் தன் கதாயுதத்தை எடுத்தான். வானில் நோக்கி வீசினான்.