கந்தன் காலடியை வணங்கினால் | Lord Murugan Devotional songs Tamil

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள்

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்
தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்

தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்

அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை)

உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி

அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு
கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே

அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்

கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்வந்தவினை தீர்ந்துவிடும்

மற்றவற்றைத் தள்ளுங்கள் (கந்தன் காலடியை)