சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து
பொருளில் உன்னை வைத்தால்
நல்ல கவிதை வரும் … முருகா
நால்வகை இன்பம் வரும்

(சொல்லில் … )

செம்மை மனம் வளர்த்து
சேவலை அங்குவைத்தால் (2)
முன்மை பிறப்பினிலும் … முருகா முக்தியும்
கொடுப்பவன் நீ

(சொல்லில் … )

கற்பனைச் சோலை வைத்து
கலை மயில் ஆட வைத்தால் (2)
அற்புதம் கோடி உண்டு … முருகா அழியும் வினை இரண்டு

(சொல்லில் … )

பார்வையில் குன்றம் வைத்து
பாசத்தில் உன்னை வைத்தால்
ஓர் ஒளி காட்டிவைப்பாய் … முருகா
ஓம் என கூட்டிவைப்பாய்

(சொல்லில் … )

முருகா … முருகா … முருகா … முருகா … முருகா … முருகா.