ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று
மாறுபடு சூரரை வதைத்த முகமொன்று
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்று
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாள