Bilvashtakam/Vilvashtakam Slogam in Tamil – வில்வாஷ்டகம்

வில்வாஸ்டகம்

மூன்று தளம் மூன்று குணம்
மூன்று விழி மூவாயுதம்
மூலமென கோலம் தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

முப்பிறவி துயர் நீக்கும்
முப்பிரிவாய் விளங்கிடுமே
புனிதமெல்லாம் அள்ளித்தரும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

கோடி கோடி கல்யாணம்
செய்து வைக்கும் இனிய பலன்
குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால்
கால பைரவ தரிசனத்தால்
வரும் பலனைத் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

பூச்சிகளால் வீணாகா
அதிசயமாம் வில்வதளம்
மங்களமே தினமருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

திங்கள் எனும் இந்துவாரம்
விரதமுடன் பூஜை செய்ய
ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வாஜபேயம் சோமயாகம்
வளர்க்கின்ற யாக பலன்
அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கயைப்பிரயாகை யாத்திரையை
செய்வதனால் வரும் பலனை
தந்திடுமே வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

சாளக்கிராமம் வணங்கும் பலன் ,
சான்றோரை வணங்கும் பலன்
தந்தருளும் எந்நாளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி ஆனை தான பலன்
அஸ்வமேத யாக பலன்
ஆயிரமாய்த் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காண்பதுவும் புண்ணியமே
தொடுவதும் புண்ணியமே
கனிவருளும் நெஞ்சினிலே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பாடசாலை ஆலயங்கள்
பல ஆயிரம் அமைப்பதனால்
வருகின்ற பலன் அருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

அன்னதானம் பல ஆயிரமாய்
செய்கின்ற ஜென்ம பலன்
அளித்திடுமே ஓர் அர்ச்சினையில்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வில்வாஸ்ட்டகம் தன்னை
சிவனருகில் உரைப்போர்க்கு
செல்வமெல்லாம் கூடிவரும்,
சிவனருளும் கைகூடும்.