Tag «தாயுமானவர் பாடல்களில் வெளிப்படும் சிந்தனைகள்»

Thayumanavar Songs – தேன்முகம்

15. தேன்முகம் தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும் நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1. வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக் காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால் ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2. கண்டன அல்ல என்றே …

Thayumanavar Songs – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்

ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் ஆகார புவனமின் பாகார மாக அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக் குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல் தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1. அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும் ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத் தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச் சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே இனம்பிரிந்த மான்போல்நான் …

Thayumanavar Songs – சிற்சுகோதய விலாசம்

சிற்சுகோதய விலாசம் காக மோடுகழு கலகை நாய்நரிகள் சுற்று சோறிடு துருத்தியைக் காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர் காமவேள் நடன சாலையை போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும் மலமி குந்தொழுகு கேணியை மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை முடங்க லார்கிடை சரக்கினை மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக வேதம் ஓதியகு லாலனார் வனைய வெய்யதடி கார னானயமன் வந்த டிக்குமொரு மட்கலத் தேக மானபொயை மெய்யெ னக்கருதி ஐய வையமிசை வாடவோ தெரிவ தற்கரிய பிரம மேஅமல சிற்சு …

Thayumanavar Songs – தேசோ மயானந்தம்

12. தேசோ மயானந்தம் மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி மன்னுமுனி வர்க்கேவலமாய் மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு கருமருவு காயத்தை நிர்மலம தாகவே கமலாச னாதிசேர்த்துக் காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக் கலைமதியி னூடுதாக்கி உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல் உணர்வான விழியைநாடி ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம் உற்றிடஎன் மனதின் வண்ணந் திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ தேடரிய சத்தாகிஎன் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. 1. இப்பிறவி என்னுமோர் …

Thayumanavar Songs – சச்சிதானந்தசிவம்

11. சச்சிதானந்தசிவம் பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று படர்வெளிய தாகிஎழுநாப் பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட பகிரண்ட உயிரெவைக்கும் நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத நிர்மலா னந்தமயமாய்ப் பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான் பேரின்ப மெய்திடாமல் பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல் பித்தாக வோமனதைநான் சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ் சாசுவத நிட்டைஅருளாய் சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே.1. குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு கொள்ளல்போல் …

Thayumanavar Songs – எங்கு நிறைகின்ற பொருள்

10. எங்கு நிறைகின்ற பொருள் அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய ஆப்தர்மொழி யொன்றுகண்டால் அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை அறிந்தார்கள் அறியார்களார் மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுமவரார் மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும் வன்மையொ டிரக்கமெங்கே புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம் பூதபே தங்களெவிடம் பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு பொறைபொறா மையுமெவ்விடம் எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர் யாதுமுனை யன்றியுண்டோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே.1. அன்னே யனேயெனுஞ் சிலசமயம் …

Thayumanavar Songs – சுகவாரி

9. சுகவாரி இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் எனருசித் திடவலியவந் தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர் இடையறா துருகிநாடி உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும் ஓய்ந்துயர்ந் தவசமாகி உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடிகாண் கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக் கருதிநகை யாவளதுபோல் சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை தோற்றிற் சுகாரம்பமாஞ் சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே. 1. அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை …

Thayumanavar Songs – ஆனந்தமானரம்

8. ஆனந்தமானரம் கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக் குணமொன்றும் ஒன்றிலேன்பால் கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன் குணங்களெத் தனைகொடியபாழ்ங் கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக் கள்ளமெத் தனையுள்ளசற் காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை கதிக்கென் றமைத்தஅருளில் செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ செல்வதெத் தனைமுயற்சி சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற தேகத்தில் வாஞ்சைமுதலாய் அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை யானேன் இவைக்கும் ஆளோ அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 1. தெருளாகி மருளாகி யுழலுமன …

Thayumanavar Songs – சித்தர்கணம்

7. சித்தர்கணம் திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே சென்றோடி யாடிவருவீர் செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே திகழ்துருவம் அளவளாவி உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில் உழுந்தமிழும் ஆசமனமா வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன் உலகும்அயி ராவதமுமே கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககனவட் டத்தையெல்லாம் கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன் விளங்குவரு சித்திஇலிரோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே . 1. பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் …