Tag «மகாபாரதம் நாடகம்»

Mahabharatham story in Tamil 66 – மகாபாரதம் கதை பகுதி 66

மகாபாரதம் – பகுதி 66 அவ்வாறு ஏக்கப்பார்வை பார்த்த குந்தியிடம், அத்தை! உனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். முன்னொரு காலத்தில், நீ துர்வாச முனிவரிடம் சகல தேவர்களையும் அழைக்கும் வரம் ஒன்றைப் பெற்றது நினைவிருக்கிறதா? என்றார் கிருஷ்ணர். குந்திதேவி அதிர்ந்தாள். இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது? அவ்வாறு சிந்தித்த அடுத்தகணமே, அந்த அதிர்ச்சி நியாயமற்றது என்பதையும், லோக நாயகனான இந்த திருமாலுக்கு எது தான் தெரியாது என்பதையும் தெரிந்து கொண்டு, கண்ணா! இப்போது …

Mahabharatham story in Tamil 64 – மகாபாரதம் கதை பகுதி 64

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 64 கிருஷ்ணா ! நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் ? என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் ? நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா ! எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் தான். நான் வரும் வழியில் …

Mahabharatham story in Tamil 63 – மகாபாரதம் கதை பகுதி 63

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 63 போர் நடப்பது என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றார். அதில் விதுரரும் ஒருவர். கிருஷ்ணர் விதுரரை சந்திக்க சென்ற போது, விதுரர் கிருஷ்ணரின் பாதக் கமலங்களைப் பணிந்து வரவேற்றார். கண்ணா! அஸ்தினா புரத்துக்கு எழுந்தருளிய நீ எனது இல்லத்திற்கு வர வேண்டும், என அழைத்தார். நல்லவர்களின் அழைப்பை ஆண்டவன் காலம் தாழ்த்தி ஏற்பானே ஒழிய வராமல் இருக்க …

Mahabharatham story in Tamil 62 – மகாபாரதம் கதை பகுதி 62

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 62 துரியோதனனுக்கு கோபம்… தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை பார்க்கச் சென்றான். அவரிடம், பலராமரே! போர்க்களத்திலே தாங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உமது பெரும் யதுகுலப் படையுடன் வர வேண்டும், என வேண்டினான். பின்னர் அஸ்தினாபுரத்துக்கு போய்விட்டான். இதனிடையே சஞ்சய முனிவரை திருதராஷ்டிரன் பாண்டவர்களிடம் தூது …

Mahabharatham story in Tamil 61 – மகாபாரதம் கதை பகுதி 61

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 61 இதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார்! உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் வருமாறு அனுப்பி வைக்கும்படி சொல்லியனுப்பினார். இதனிடையே துரியோதனன், தனக்கு ஆதரவு கேட்டு, பல நாட்டு அரசர்களுக்கும் தூது அனுப்பினான். துவாரகை மன்னர் கிருஷ்ணரின் ஆதரவு மிக அவசியம் என்பதை அவன் உணர்ந்தான். பரமாத்மாவிடம் தானே நேரில் சென்று ஆதரவு …

Mahabharatham story in Tamil 60 – மகாபாரதம் கதை பகுதி 60

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 60 அந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா! இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா! இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே! நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே! இவன் எங்கிருந்தான்? எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்? என்றான். விராடனே! இவன் உலகை …

Mahabharatham story in Tamil 59 – மகாபாரதம் கதை பகுதி 59

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 59 துரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா! தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் வெற்றிகரமாக முடித்தோம். நான் வெளியில் வந்தவுடனையே துரியோதனனுடன் போர் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். துரியோதனனுக்கும் எனக்கும் ஜென்ம பகை இருக்கிறது. அதனால் நான் அவனுடன் மட்டுமே போரிடுவேன். அவனோ புறமுதுகிட்டு ஓடிவிட்டான். அவனது …

Mahabharatham story in Tamil 58 – மகாபாரதம் கதை பகுதி 58

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 58 உத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி (அரவாணி) உருவத்துடன் தேரோட்ட உத்தரகுமாரன் ஏறிக்கொண்டான். போர்க்களத்தில் நுழைந்தானோ இல்லையோ, உத்தரகுமாரன் அலறி விட்டான். பிருகந்நளா! இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே! நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும்? நான் துரியோதனனிடம் சிக்கி இறக்கப்போவது உறுதி. பசுக்கூட்டத்தை வேண்டுமானால் அவன் கொண்டு …

Mahabharatham story in Tamil 57 – மகாபாரதம் கதை பகுதி 57

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 57 திரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவுபதி கதறினாள். தெய்வங்களே! என்னைக் காப்பாற்றுங்கள், உடனே வாருங்கள், என புலம்பினாள். பீமனின் காதில் அவளது அபயக்குரல் கேட்டது. அவன் ஆவேசமாக வந்தான். தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கினான். கீசக சகோதரர்களை சுழற்றி சுழற்றி அடித்தான். அவர்கள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மரத்தையே பிடுங்கி அடிக்கும் …