Tag «மகாபாரதம் முழு கதை»

Mahabharatham story in Tamil 87 – மகாபாரதம் கதை பகுதி 87

மகாபாரதம் பகுதி-87 ​ அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் …

Mahabharatham story in Tamil 86 – மகாபாரதம் கதை பகுதி 86

மகாபாரதம் பகுதி-86 ​ துரியோதனனுக்கு இப்போது இக்கட்டான நிலை. ஒரு சிறு பையன், இத்தனை பேரை அழிக்கிறான் என்றால், துரோணர், கிருபாச்சாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி போன்ற மாபெரும் சக்திகளையெல்லாம் புறமுதுகோடச் செய்கிறான் என்றால், அர்ஜுனன், பீமன் போன்ற மகாசக்திகளுக்கெல்லாம் நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையுடன் நின்ற போது, மாவீரன் கர்ணன் அவன் முன்னால் வந்தான். துரியோதனன் அவனிடம், கர்ணா! அபிமன்யு நம்மவரை துவம்சம் செய்கிறான். இப்போது அர்ஜுனன் அவன் அருகில் இல்லை. அவனும், …

Mahabharatham story in Tamil 85 – மகாபாரதம் கதை பகுதி 85

மகாபாரதம் பகுதி-85 ​ அவன் பல வலிமையான பாணங்களால் அபிமன்யுவைக் காயப்படுத்தினான். ஆனால், அபிமன்யு தன் உடலில் இருந்து கொட்டும் குருதி கண்டு மிகுந்த ஆனந்தமும் ஆவேசமும் அடைந்து கர்ணனை நோக்கி விட்ட அம்புகள் அவனை நிலைகுலையச் செய்தன. கர்ணன் தன் தேருடன் தோற்றோடினான். பின்னர் கிருபாசாரியார் அபிமன்யுவுடன் போர்செய்ய வந்தார். அத்துடன் சகுனி, அவனது மகன் ஆகியோர் அவனைச் சூழவே, கோபமடைந்த அபிமன்யு ஒரு பாணத்தை விட அது சகுனியின் மகனின் தலையை அறுத்தெறிந்தது. சகுனி …

Mahabharatham story in Tamil 84 – மகாபாரதம் கதை பகுதி 84

மகாபாரதம் பகுதி-84 ​ பகவான் நாராயணனின் அவதாரமான அந்தக் கிருஷ்ணன் மீது பகதத்தன் தொடர்ந்து அம்புகளை விடுத்தான். அந்த அம்புகள் கிருஷ்ணனின் ஸ்பரிசம் படுவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, கிருஷ்ணனின் உடலில் மாலை போன்ற வடிவில் போய் விழுந்தன. அந்த அம்புமாலையைத் தாங்கிய கிருஷ்ணரின் அழகை தேவர்கள் வானுலகில் இருந்தபடி புகழ்ந்தனர். உலக உயிர்கள் பகவானின் மீது பல துõஷணைகளைச் செய்கின்றன. நீ ஆண்டவனா? உனக்கு கண் இருக்கா? காது இருக்கா? என்றெல்லாம் நாம் கூட …

Mahabharatham story in Tamil 83 – மகாபாரதம் கதை பகுதி 83

மகாபாரதம் பகுதி-83 ​ ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. அர்ஜுனன், திருஷ்டத்யும்னன் முதலானோரின் அம்புகளுக்கு எதிரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. கவுரவப்படைகள் பின்வாங்கின. முக்கிய அரசர்களெல்லாம் புறமுதுகிட்டு ஓடினர். துரோணரால் இதைத் தாங்க முடியவில்லை. முப்பதாயிரம் படைவீரர்கள் சூழ, அவர் அர்ஜுனனைத் தாக்குவதற்காக முன்னேறி வந்தார். அவரது அம்பு மழையை தாக்குப்பிடிக்க முயன்ற நகுல, சகாதேவர்கள் அது முடியாமல் போனதால் புறமுதுகிட்டு ஓடினர். எப்படியோ தர்மரை நெருங்கி விட்டார் துரோணர். இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அப்போது தர்மர் …

Mahabharatham story in Tamil 82 – மகாபாரதம் கதை பகுதி 82

மகாபாரதம் பகுதி – 82 ​ கர்ணா! தவறாக நினைக்காதே! நீ சேனாதிபதியாகி விட்டால், போரின் பெரும் பொறுப்பு உனக்கு வந்துவிடும். என் அருகில் இருக்க உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? என்னைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக் கிறேன், என்றான். கர்ணனும் சரியென ஒப்புக்கொண்டான். பின்பு துரோணச்சாரியாரை தனது படையின் சேனாதிபதியாக்கினான். பத்துநாட்கள் பீஷ்மர் போர் புரிந்து அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்பார்த்து படுத்திருந்த வேளையில், துரோணர் வில்லெடுத்தார். பதினோராம் நாள் போர் துவங்கியது. …

Mahabharatham story in Tamil 81 – மகாபாரதம் கதை பகுதி 81

மகாபாரதம் பகுதி – 81​காரணம் இல்லாமல் கடவுள் காரியம் எதையும் செய்வதில்லை. கிருஷ்ண பகவானின் சங்கொலி, போர் வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் அதிபயங்கர சப்தமாய் ஒலிக்க, பீஷ்மரின் காதில் அது தேனாய் பாய்ந்தது. உயிர் போகும் தருணத்தில் மனிதனுக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. எப்படி உயிர் போகிறதோ, அதற்கு தகுந்தாற் போன்ற வலியும் ஏற்பட்டு துடிக்க வைக்கும். பீஷ்மரின் உடலில் அர்ஜுனன் பாய்ச்சிய ஏராளமான அம்புகள் பெரும் வலியை உண்டாக்கியது. அந்த மகாத்மா அதைப் பொறுத்துக் கொண்டார். …

Mahabharatham story in Tamil 80 – மகாபாரதம் கதை பகுதி 80

மகாபாரதம் பகுதி – 80​அப்போது அசுரன் அலம்புசன் மிகப்பெரிய பாறை ஒன்றைத் துõக்கி பீமன் மீது வீசினான். அதை அபிமன்யு தனது அம்பால் தடுத்து நிறுத்தி பொடிப் பொடியாக்கினான். அபிமன்யுவின் இந்த வீரம் கண்டு களித்த பீமன், இன்னும் ஆக்ரோஷமாக போரிட்டான். அலம்புசன் மீது தன் கையில் இருந்த வேல்கம்பு ஒன்றை எறிந்து கொன்றான். அலம்புசன் இறக்கவே, அவனுடன் இருந்த அசுர வீரர்கள் பயந்து சிதறினர். பீமன் அவர்கள் ஒருவர் விடாமல் கொன்றதுடன், துரியோதனனின் ஆதரவாளர்களான வடதேசத்து …

Mahabharatham story in Tamil 79 – மகாபாரதம் கதை பகுதி 79

மகாபாரதம் – பகுதி 79 அலம்புசனுக்கும் அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை ஏதும் செய்ய முடியாததால், மாயையில் சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது இயற்கை தானே! அரவான் அதிர்ச்சியடைந்தான். தன் பலத்தையெல்லாம் இழந்து நின்ற வேளையில் இதுதான் சமயமென அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான் அலம்புசன். அரவானின் மரணம் கவுரவ சேனைக்கு புதிய ஆற்றலைத் தந்தது. அரவான் மடிந்தான், அலம்புசன் வாழ்க, துரியோதன மாமன்னர் வாழ்க என்ற …