Tag «மகாபாரதம் vijay tv videos»

Mahabharatham story in Tamil 78 – மகாபாரதம் கதை பகுதி 78

மகாபாரதம் – பகுதி 78 சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், இந்த இருவரின் பலத்தின் முன்பு துரியோதனின் படைகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயத்தில் புறமுதுகிட்டு ஓடினர். அப்போது, துரியோதனின் தம்பி விகர்ணன் பாண்டவர் படைகளை ஒரு இடத்தில் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து விட்ட அபிமன்யு, அவனோடு கடும் யுத்தம் …

Mahabharatham story in Tamil 77 – மகாபாரதம் கதை பகுதி 77

மகாபாரதம் – பகுதி 77 பரந்தாமா ! என்ன இது விபரீதம்! சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா? எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் போர் புரிகிறேன். இல்லாவிட்டால், என் பாணங்கள் இதற்குள் எதிரிகளின் தலைகளைக் கொய்திருக்காதா! கேசவா! சினம் தணிந்து என் தேரில் மீண்டும் ஏறும். அபிமன்யுவும், பீமனும் தங்களைக் காத்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். பீஷ்மரால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட நான் மகிழத்தான் …

Mahabharatham story in Tamil 75 – மகாபாரதம் கதை பகுதி 75

மகாபாரதம் – பகுதி 75 பீஷ்மருக்கு அவர் நினைத்தாலொழிய மரணம் வராது என்ற வரத்தைப் பெற்றிருந்தார். யாராலும் அவரை வெல்லமுடியாது. இந்த நிலையில் அவரை எப்படி கொல்வது என்பதை அடிப்படையாக வைத்தே இந்த கேள்வியை கிருஷ்ணர் கேட்டார். இதற்கான பதில் அர்ஜுனனுக்கு தெரியவில்லை. எனவே கிருஷ்ணரே பீஷ்மர் அருகில் தனது தேரை ஓட்டிச் சென்றார். பீஷ்மரே! இது போர்க்களம். ஆனால் உமக்கு மட்டும் அழிவு கிடையாது என்பதை நான் அறிவேன். போர்க்களத்திற்கு வந்தபிறகு வெற்றி தோல்வி என்பதை …

Mahabharatham story in Tamil 72 – மகாபாரதம் கதை பகுதி 72

மகாபாரதம் – பகுதி 72 எல்லா நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்ததும், போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை கவுரவர்கள் ஆளாக்கி விட்டதை எடுத்துக் கூறினார். அவர்கள், தர்மத்தைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் தருவதாக வாக்களித்தனர். இதே போல துரியோதனனும் தன் ஆதரவாளர்களை வரவழைத்தான். தனக்கு ஆதரவு தர மறுப்பவர்கள் கொல்லப்படுவர் என அறிவித்து ஓலை அனுப்பினான். பயந்து போன அவர்கள் துரியோதனனின் பக்கம் சேர்ந்தனர். இந்நேரத்தில், மந்திர தேசத்து மன்னனும், தனது தங்கை மாத்ரியை பாண்டவர்களின் …

Mahabharatham story in Tamil 71 – மகாபாரதம் கதை பகுதி 71

மகாபாரதம் – பகுதி 71 அம்மா! தாங்கள் என்னைப் பெற்றவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஆனால், ஊரைக் கண்டு அஞ்சி அன்றொரு நாள் என்னை உதாசீனப்படுத்தினீர்களே! அதை நினைத்துப் பாருங்கள். நான் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா? அனைத்து வித்தைகளும் தெரிந்தாலும், க்ஷத்திரியனல்லாத சூத்திரனாக வளர்ந்ததால், என்னை துரோணர், கிருபர் போன்றவர்கள் அவமானப்படுத்தினார்களே! உன் பிறப்பை பற்றி சொல் என்றார்களே! அப்போது, நான் தலை குனிந்து நின்றேன். அந்த சமயத்தில், எனக்கு …

Mahabharatham story in Tamil 70 – மகாபாரதம் கதை பகுதி 70

மகாபாரதம் – பகுதி 70 ஆனால்… என இழுத்த தேவேந்திரனை கர்ணன் கேள்விக்குறியுடன் பார்த்தான். கர்ணா… இந்த வேலை நீ அர்ஜுனன் மீது வீசக்கூடாது. பீமனின் மகன் கடோத்கஜன், பாரதப்போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களில் ஒருவனாக இருப்பான். கவுரவப்படையில் பெரும்பகுதியை அழிப்பான். அவனைக் கொல்ல நீ இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் கவுரவ சேனைக்கு நீ அதிகத் தொண்டு செய்தவன் ஆவாய். மேலும், பீமனின் மகனைக் கொன்றால், உன் நண்பன் துரியோதனன் மகிழ்ச்சியின் எல்லையை அடைவான். …

Mahabharatham story in Tamil 69– மகாபாரதம் கதை பகுதி 69

மகாபாரதம் – பகுதி 69 தெய்வத்தால் இத்தகைய தகிடுதத்தங்களை செய்ய இயலாது. அதனால் தான் அது மனித வடிவை எடுக்கிறது. கண்ணனை நாராயணனின் அவதாரம் என்பதால், நமக்கு தெய்வமாய் தெரிகிறது. அவன் செய்யும் அற்புதங்கள் தெய்வத்தைப் போல் காட்டுகின்றன. மனிதர்களிலும் அற்புதம் செய்யும் தெய்வப்பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அது கண்ணனின் அளவுக்கு இல்லை; இருக்க முடியாது. ஏனெனில், கண்ணன் நிஜமாகவே தெய்வம். மனிதன் எதைச் செய்கிறானோ அதையே அடைவான். இதை உணர்த்தவே, அநியாயம் செய்த கவுரவர்களை …

Mahabharatham story in Tamil 67 – மகாபாரதம் கதை பகுதி 67

மகாபாரதம் – பகுதி 67 அவன் திருதராஷ்டிரனிடம், தந்தையே! தங்கள் ஆட்சியில் புதிய புதிய நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது. தூதனாக வந்தவர்களைக் கொன்ற அரசர்கள் எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நல்ல யோசனைகள் எல்லாம் தங்கள் மனதில் எப்படித்தான் உதிக்கிறதோ தெரியவில்லை. பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், புலவர்கள் ஆகியோரைக் கொல்வது பெரும்பாவம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் தூதர்களும் இருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர்கள்? இதனால், கொடிய நரகமல்லவா நமக்கு கிடைக்கும். அது மட்டுமா? …

Mahabharatham story in Tamil 65 – மகாபாரதம் கதை பகுதி 65

மகாபாரதம் – பகுதி 65 துரியோதனனின் வார்த்தையால் மகிழ்ச்சியடைந்த கர்ணன், அன்பு நண்பனே! நான் இருக்கும்போது உன்னை அர்ஜுனன் எதிர்த்துவிட முடியுமா? இந்த கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தாலும்கூட எனது வில்லாற்றலின் முன் அவனால் எதுவும் செய்யமுடியாது. நீ கவலைப்படாதே. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களே என்னோடு போரிட வந்தாலும் அவர்களை என்னுடைய ஒரே பாணத்தால் அழித்துவிடுவேன். அது மட்டுமின்றி எனது நாகாஸ்திரத்தின் முன்னால் யாராலும் தப்ப முடியாது. அதற்கு அர்ஜுனனும் விதிவிலக்கல்ல, என மிகுந்த ஆணவத்துடன் சொன்னான். …