Tag «சிவன் பாட்டு தமிழ்»

வசிஷ்டர் அருளிய சிவ துதி | Shiva Thuthi

வறுமை நீங்க, வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய வசிஷ்டர் அருளிய சிவ துதி அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈசனே உன்னை வணங்குகின்றேன்!கர்ம பலன்களைச் சரியாக கொடுப்பவரே,பூத கணங்களின் அதிபதியே, உன்னை வணங்குகின்றேன்! இசையில் மிகுந்த இச்சை கொண்டுள்ளவரே,நந்தியை வாகனமாக கொண்டவரே,யாணைத் தோலை போர்த்தியவரே, மலை போன்ற வறுமை கொண்டோரையும்அந்த வருமைக் கடலிருந்து மீட்டு சந்தோஷம் என்ற வாழ்வை அருள்பவரே,மகேசனே உன்னை வணங்குகின்றேன்!

Thennadudaya Sivane Potri – சிவன் துதி பாடல்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி.சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிபராய்த்துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீரார் திருவையாறா போற்றிஏகம்பத்துறை எந்தாய் போற்றிபாகம் பெணுரு ஆனாய் போற்றிதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்றெனக்கு ஆரமுதானாய் போற்றிகுவளைக் கண்ணி கூறன் காண்கஅவளுந் தானும் உடனே காண்ககாவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி