Tag «தாயுமானவர் பாடல்கள் மண்டலத்தின்»

Thayumanavar Songs – மண்டலத்தின்

மண்டலத்தின் மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தைஅகோவெனவும் வார ணாதிஅண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில்நிறுத்துமவ தானம் போலஎண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன்அருள்வெளியில் இலக வைத்துக்கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும்நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1. ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங்கடந்தேழாம் யோக பூமிநின்றுதெளிந் தவர்பேசா மௌன நியாயத்தைநிறை நிறைவைத் தன்னைஅன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும்தான்முதலாய் அசல மாகிஎன்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்றசாந்தபத இயற்கை தன்னை. 2. பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலானஞானபதப் பரிசு காட்டிச்சதமாகி நிராலம்ப சாட்சியதாய்ஆரம்பத் தன்மை யாகிவிதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக்கீண்டெழுந்து விமல மாகிமதமாறுங் காணாத ஆனந்தசாகரத்தை மௌன வாழ்வை. …