Tag «list of murugan songs»

Sakthi Shiva Muthukumarane Muruga – KJ Yesudas Devotional Songs

சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன் சரவணஞான குருபரனே கந்தா கடம்பா கண்டிகதிர் காமவேலனே வாராய் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்) அருணகிரி வணங்க தருணத்தில் வந்து திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய் இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும் வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய் குமரகுருபரரை பேசிட செய்தாய் சுட்டகனிதந்து அவ்வைக்கு உரைத்தாய் தவிக்கும் பக்தரெனை தயவுடன் காத்திடு தாமதம் ஏன் திருமுருகையா (மெய்) காவடி …

Pazhamudir Solaithanile Painthamizhil Padi – KJ Yesudas Murugan Songs

பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன் அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும் தொழுவோம் முருகா (பழமுதிர்) கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான் கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா குமரய்யா கார்த்திகேயா செல்லய்யா வாவா அடியவர் குறைதீர்த்து ஆனந்த வாழ்வு தந்து எந்நாளும் நன்னாளாய் ஏற்றமுடன் …

KJ Yesudas Murugan Devotional Songs – Thiruthani Malaiyinile Thirunaalam

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க கனிவுடன் வேண்டியதை …

Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kanthan Karunai Songs

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு …

TM Soundarrajan Murugan Songs – Kandhan Kaladiyai Vananginal

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் தந்தை பரமனுக்கு சிவகுருநாதன் தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன் சிவசக்தி தானே வேலன் அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன் மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை) உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை …

Muruganai Koopittu Muraiyitta Perukku – TM Soundarrajan Murugan Songs

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான்! அன்பு பெருகி அருள் …

TM Soundarrajan Murugan Devotional Songs – Mannukkum Vinnukkum Naduvirunthu

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ -மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2) தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ -மண்ணுக்கும் விண்ணுக்கும்

Sri Subramanya Shadakshari Maha Mantram in Tamil with Meaning

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம் அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம் ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம் அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம். இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம். சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம் சரண்யம் த்வாம் …