Ammavum Neye! Appa Vum Neeye!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! (அம்மாவும் நீயே!) தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே! மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே! எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே? இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ? முருகா முருகா முருகா முருகா (அம்மாவும் நீயே!) பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே! ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே …