Category «மகாபாரதம் | Mahabharatham»

Mahabharatham story in Tamil 76 – மகாபாரதம் கதை பகுதி 76

மகாபாரதம் – பகுதி 76 படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ஆத்திரத்துடன் பீமன் அருகில் வந்தான். அவனுக்கு துணையாக பல நாட்டு ராஜாக்களும் வந்தனர். பீமன் அவர்களது தேர்களை தன் புஜபலத்தாலேயே அடித்து நொறுக்கினான். அந்த ராஜாக்களை தன் கதாயுதத்தால் கொன்று போட்டான். பின்னர் துரியோதனனின் தேரை தன் பலம் கொண்ட மட்டில் தூக்கி வீசினான். துரியோதனன் இறந்துவிட்டானோ …

Mahabharatham story in Tamil 75 – மகாபாரதம் கதை பகுதி 75

மகாபாரதம் – பகுதி 75 பீஷ்மருக்கு அவர் நினைத்தாலொழிய மரணம் வராது என்ற வரத்தைப் பெற்றிருந்தார். யாராலும் அவரை வெல்லமுடியாது. இந்த நிலையில் அவரை எப்படி கொல்வது என்பதை அடிப்படையாக வைத்தே இந்த கேள்வியை கிருஷ்ணர் கேட்டார். இதற்கான பதில் அர்ஜுனனுக்கு தெரியவில்லை. எனவே கிருஷ்ணரே பீஷ்மர் அருகில் தனது தேரை ஓட்டிச் சென்றார். பீஷ்மரே! இது போர்க்களம். ஆனால் உமக்கு மட்டும் அழிவு கிடையாது என்பதை நான் அறிவேன். போர்க்களத்திற்கு வந்தபிறகு வெற்றி தோல்வி என்பதை …

Mahabharatham story in Tamil 74 – மகாபாரதம் கதை பகுதி 74

மகாபாரதம் – பகுதி 74 பின்பு அனைவரும் காளி கோயிலுக்கு புறப்பட்டனர். அங்கு அரவான், முகமலர்ச்சியுடன் நின்றான். மரணத்தைக் கண்டு அஞ்சாமல், முக மலர்ச்சியுடன் வரவேற்பவர்கள், சொர்க்கம் அடைவர். காளியின் முன்பு நின்ற அரவான், ஜெய் காளிமாதா! என்னை ஏற்றுக் கொள், என்றவனாய், தன் தலையை தானே சீவினான். அரவானின் களப்பலிக்கு பிறகு கிருஷ்ணரும் பாண்டவர்களும் தங்கள் படைத்தலைவர் ஸ்வேதனை வரவழைத்தார்கள். ஸ்வேதனின் தலைமையில் பீமன், அர்ஜுனன், அபிமன்யு ஆகியவர்களைக் கொண்ட அதிரதப்படையும், சிகண்டி, சாத்தகி, விராடராஜன், …

Mahabharatham story in Tamil 73 – மகாபாரதம் கதை பகுதி 73

மகாபாரதம் – பகுதி 73 மாயங்கள் புரிவதில் வல்லவரான கிருஷ்ணரின் யோசனையில் உதித்தது ஒரு திட்டம். அமாவாசையன்று அரவானை களபலி கொடுத்தால், கவுரவர்களின் வெற்றி உறுதியாகி விடும். எனவே, அமாவாசையையே மாற்றி விட்டால் என்ன! அதெப்படி முடியும், கிரகங்களின் சஞ்சாரத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்! கடவுளால் அது முடியும். ஏனெனில், கிரகங்கள் அவரால் படைக்கப்பட்டவை. அவர் சொல்வதைக் கேட்டு நடப்பவை. கிருஷ்ணர், நாராயணனின் அம்சம் தான். கடவுள் தான்! இருப்பினும், இப்போதைக்கு அவர் பூமியில் மனிதனாக பிறந்திருக்கிறாரே! …

Mahabharatham story in Tamil 72 – மகாபாரதம் கதை பகுதி 72

மகாபாரதம் – பகுதி 72 எல்லா நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்ததும், போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை கவுரவர்கள் ஆளாக்கி விட்டதை எடுத்துக் கூறினார். அவர்கள், தர்மத்தைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் தருவதாக வாக்களித்தனர். இதே போல துரியோதனனும் தன் ஆதரவாளர்களை வரவழைத்தான். தனக்கு ஆதரவு தர மறுப்பவர்கள் கொல்லப்படுவர் என அறிவித்து ஓலை அனுப்பினான். பயந்து போன அவர்கள் துரியோதனனின் பக்கம் சேர்ந்தனர். இந்நேரத்தில், மந்திர தேசத்து மன்னனும், தனது தங்கை மாத்ரியை பாண்டவர்களின் …

Mahabharatham story in Tamil 71 – மகாபாரதம் கதை பகுதி 71

மகாபாரதம் – பகுதி 71 அம்மா! தாங்கள் என்னைப் பெற்றவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஆனால், ஊரைக் கண்டு அஞ்சி அன்றொரு நாள் என்னை உதாசீனப்படுத்தினீர்களே! அதை நினைத்துப் பாருங்கள். நான் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா? அனைத்து வித்தைகளும் தெரிந்தாலும், க்ஷத்திரியனல்லாத சூத்திரனாக வளர்ந்ததால், என்னை துரோணர், கிருபர் போன்றவர்கள் அவமானப்படுத்தினார்களே! உன் பிறப்பை பற்றி சொல் என்றார்களே! அப்போது, நான் தலை குனிந்து நின்றேன். அந்த சமயத்தில், எனக்கு …

Mahabharatham story in Tamil 70 – மகாபாரதம் கதை பகுதி 70

மகாபாரதம் – பகுதி 70 ஆனால்… என இழுத்த தேவேந்திரனை கர்ணன் கேள்விக்குறியுடன் பார்த்தான். கர்ணா… இந்த வேலை நீ அர்ஜுனன் மீது வீசக்கூடாது. பீமனின் மகன் கடோத்கஜன், பாரதப்போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களில் ஒருவனாக இருப்பான். கவுரவப்படையில் பெரும்பகுதியை அழிப்பான். அவனைக் கொல்ல நீ இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் கவுரவ சேனைக்கு நீ அதிகத் தொண்டு செய்தவன் ஆவாய். மேலும், பீமனின் மகனைக் கொன்றால், உன் நண்பன் துரியோதனன் மகிழ்ச்சியின் எல்லையை அடைவான். …

Mahabharatham story in Tamil 69– மகாபாரதம் கதை பகுதி 69

மகாபாரதம் – பகுதி 69 தெய்வத்தால் இத்தகைய தகிடுதத்தங்களை செய்ய இயலாது. அதனால் தான் அது மனித வடிவை எடுக்கிறது. கண்ணனை நாராயணனின் அவதாரம் என்பதால், நமக்கு தெய்வமாய் தெரிகிறது. அவன் செய்யும் அற்புதங்கள் தெய்வத்தைப் போல் காட்டுகின்றன. மனிதர்களிலும் அற்புதம் செய்யும் தெய்வப்பிறவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அது கண்ணனின் அளவுக்கு இல்லை; இருக்க முடியாது. ஏனெனில், கண்ணன் நிஜமாகவே தெய்வம். மனிதன் எதைச் செய்கிறானோ அதையே அடைவான். இதை உணர்த்தவே, அநியாயம் செய்த கவுரவர்களை …

Mahabharatham story in Tamil 68 – மகாபாரதம் கதை பகுதி 68

மகாபாரதம் – பகுதி 68 கர்ணா! உன் பிறப்பு அதிசயமானது என்று துவங்கிய கிருஷ்ணர், அவன் பிறந்த கதை, வளர்ந்த கதையை எடுத்துச் சொன்னதும், கர்ணனின் முகம் வாடித்தான் போனது, ராஜமாதா குந்திதேவியா தன்னைப் பெற்றெடுத்தவள், பாண்டவர்கள் என் உடன் பிறந்த சகோதரர்களா! என் தந்தை சூரிய பகவானா? இப்படி பல சிந்தனைகளுக்கு மத்தியில், தான் ஏன் பிறந்தோம்? என்று உணர்வுப் பிழம்பானான். உணர்வுகளும், கவலைகளும் தாக்கினாலும் கூட மனிதன் தன்னிலையில் இருந்து மாறிவிடக் கூடாது என்பதற்கு …