Category «ஆன்மீக கதைகள் | Spiritual Stories»

பயபக்தியுடன் ஸர்ப்பத்தை வணங்கிய துரியோதனன்

பயபக்தியுடன் ஸர்ப்பத்தை வணங்கிய துரியோதனன் பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ”ஐவரின் பத்தினியே… இன்று யாருடைய முறை?” என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் …

மகாபாரதம் கிளைக் கதை | அஸ்வத்தாமன்

மகாபாரதம் கிளைக் கதை | அஸ்வத்தாமன் – 1 குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18-ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். அதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, கொடுமைகளையே செய்து வந்த அவனுக்கு இப்படியரு கோர முடிவு ஏற்பட்டது. நல்ல மரணம் அவனைத் தழுவுவதில் தாமதம் நிகழ்ந்தது. குற்றுயிராக அவன் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதும்கூட, அவன் பூரணமாகத் தன் தவற்றை உணரவில்லை. இந்த நிலையில், …

மஹாபாரத கிளைக் கதை | பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்

மஹாபாரத கிளைக் கதை | பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் – கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் – உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். …

மஹாபாரதம் | பரீக்ஷித் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட கதை

மஹாபாரதம் | பரீக்ஷித் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட கதை புராணங்களில் படித்தவை பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன், தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்தஉப-பாண்டவர்கள் ஐவரையும், பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். (உப-பாண்டவர்கள் – பாண்டவர்களின் மகன்கள்) வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் …

ராமாயண கிளைக் கதை | ராமாயணத்திலும் ஓர் குசேலன்

ராமாயண கிளைக் கதை | ராமாயணத்திலும் ஓர் குசேலன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை. ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன் ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். …

எந்நாளும் இறைவனோடிரு

எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு) ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் …

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman?

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணையும், வடை மாலையும் பிடிக்கும்? | Why Vadamala and Butter offered for Hanuman? இலங்கை யுத்தம் ஜெயித்த பின் ஸ்ரீ ராமரும் சீதா தேவியும் அயோத்யா நாட்டை ஆள்வோராக பதவி ஏற்றனர். அந்த சமயம் எல்லா வகையிலும் தமக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் பல பரிசுகள் வழங்கினர். ஆனால் ஆஞ்சநேயர் மட்டும் தனக்கு எந்த பரிசும் தேவையில்லை என்றும் கடைசி வரை ராமரோடும், சீதையோடும் இருந்தாலே போதும் என்று கூறிவிட்டார். இதைக் …

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas ஒரு முறை ஒன்பது க்ரஹங்களும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சையில் ஈடுபட்டனர் … எந்த முடிவுக்கும் வர இயலாமல் இந்திரனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டனர்… தனக்கு ஏன் வம்பு என்று நினைத்த இந்திரன் விக்ரமாதித்ய மன்னனுக்கே விடை தெரியும் என்று சொல்லி அனுப்பினான்… விக்ரமாதித்யனுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது… அரசனின் அரியணைக்கு அருகே இருந்து வாசல் வரை வரிசையாக போடப்பட்டு இருந்த அரியணைகளில் அவர்களை …

இந்திரனின் ஐராவதம் கதை | Story of Airavatham

இந்திரனின் ஐராவதம் கதை | Story of Airavatham ஒரு முறை இறைவனை பூஜித்த மலர்களை எடுத்துக் கொண்டு துர்வாச மகரிஷி இந்திரனைக் காணச் சென்றார்… அந்நேரம் அசுரர்களுடன் போரிடுவதற்காக இந்திரன் ஐராவதம் என்ற தன் வெள்ளை யானையின் மீது அமர்ந்து சென்று கொண்டு இருந்தான்… முனிவர் கொடுத்த மலர்களை தன் யானையின் தந்தத்தின் மீது பக்தியோடு வைத்தான் இந்திரன்… ஆனால் யானையோ அதைக் கீழே தள்ளி காலால் மிதித்தது… இதைக் கண்டு கோபமுற்ற துர்வாசர் அது …