Category «ஆன்மீக கதைகள் | Spiritual Stories»

Mahabharatham story in Tamil 100 – மகாபாரதம் கதை பகுதி 100

மகாபாரதம் பகுதி-100 ​ பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்று கொடுத்து வந்தார். கர்ணனும், வில்லார்வம் காரணமாக அந்தணனைப் போல் வேடமிட்டு பரசுராமரிடம் வித்தை கற்றான். ஒருமுறை, பரசுராமர் அவனது மடியில் தலை வைத்து படுத்திருந்த போது, வண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் துளைத்தது. குருவின் துõக்கம் கலைந்து விடக்கூடாது என்பதால், கர்ணன் அந்த வலியையும் தாங்கவே ரத்தம் பெருக்கெடுத்து பரசுராமரின் கையில் பட அவர் விழித்து விட்டார். ஒரு க்ஷத்திரியனால் மட்டுமே இதுபோன்ற வலியைத் தாங்க …

Mahabharatham story in Tamil 99 – மகாபாரதம் கதை பகுதி 99

மகாபாரதம் பகுதி-99 ​ கர்ணனது தேரைச் சுற்றி கோபக்கனல் வீசும் கண் களுடன் கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், சகுனி முதலானவர்கள் நின்றனர். அர்ஜுனன் அவன் மீது அம்புகளைச் சரமாரியாகப் பாய்ச்சினான். கர்ணனும் பதிலுக்குத் தாக்க இந்த யுகமே முடிந்துவிடுமே என்று விண்ணோர்களே பயந்து விட்டனர். கர்ணனின் திறத்தை அடக்க கிருஷ்ணரும், அர்ஜுனனின் திறத்தை அடக்க சல்லியனும் மிகத்திறமையாக தேரோட்டினர். அவர்கள் இருவரும் தேரோட்டுவதில் சமவலிமை படைத்தவர்கள் என்றே அனைவரும் பேசிக் கொண்டனர். கிருஷ்ணருக்கு எவ்வகையிலும் குறைந்தவனில்லை என்று காட்டும் …

Mahabharatham story in Tamil 98 – மகாபாரதம் கதை பகுதி 98

மகாபாரதம் பகுதி-98 ​ அவன் சல்லி யனிடம், சல்லியா! இகழ்ந்து பேசாதே! இப்போது பார் என் வலிமையை! என் ஒரே பாணத்தால் பீமன் மட்டுமல்ல, அர்ஜுனனையும் சேர்த்து அழிப்பேன், என்றான் வீரத்துடன். ஆனால், சல்லியன் சொன்னதே நடந்தது. பீமன் தனது தேரில் கர்ணன் முன்னால் வந்து நின்றான். அவனது பாணங்கள் கர்ணனை காயப்படுத்தின. கர்ணன் மயங்கி விழுந்து விட்டான். பின்னர், சல்லியன் தான் அவனுக்கு மயக்கம் தெளிவிக்க வேண்டியதாயிற்று. மயக்கம் தெளிந்து எழுந்த கர்ணன், பீமனைச் சுற்றி …

Mahabharatham story in Tamil 97 – மகாபாரதம் கதை பகுதி 97

மகாபாரதம் பகுதி-97 ​ அப்போது அவன் துரியோதனனிடம், நண்பனே! அர்ஜுனனுக்கு தேரோட்ட மாயாவியான கண்ணன் இருக்கிறான். அதுபோல், மிகச்சிறந்த தேரோட்டி ஒருவன் எனக்கு வேண்டும். அதுமட்டுமல்ல! போரில் சமயத்துக்கு தகுந்தபடி முடிவெடுக்கும் அறிவாளியாகவும் அவன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் தான் சல்லியன் (இவன் நகுலன், சகாதேவனின் தாய்மாமன், சந்தர்ப்பவசத்தால் துரியோதனனின் படையில் இணைந்தவன்) அவன் எனக்கு சாரதியானால், கிருஷ்ணாச்சுனர்களைக் கொல்வேன். பீமனை வெல்வேன், என கர்ஜித்தான். இதைக் கேட்ட துரியோதனன் சல்லியனிடம் சென்று, நான் ஒரு உதவி …

Mahabharatham story in Tamil 96 – மகாபாரதம் கதை பகுதி 96

மகாபாரதம் பகுதி-96 ​ உடனே, யாராலும் அழிக்க முடியாத காலப்பிருஷ்டம் என்ற தனது வில்லை எடுத்து, நகுலனுடன் போர் செய்தான். நகுலன் அதை உடைக்க முயன்று சோர்வடைந்தான். பின்னர் பெருந்தன்மையுடன், “நகுலா! நீ பிழைத்துப் போ, எனச்சொல்லி கர்ணன் அவனை அனுப்பி வைத்தான். ஆனால், தனது குறி அர்ஜுனன் என்பதால் அவனை நோக்கிச் சென்றான். கிருஷ்ணன் மீதும் அர்ஜுனன் மீதும் பாணங்களை தொடுத்தான். அது அவர்களை ஏதுமே செய்யவில்லை. அர்ஜுனன் தன்னை கிருஷ்ணரிடம் ஒப்படைத்துக் கொண்டவன். அவரது …

Mahabharatham story in Tamil 95 – மகாபாரதம் கதை பகுதி 95

மகாபாரதம் பகுதி-95 ​ அவன்தான் பீமன்! எதற்கும் கலங்காமல் அவன் ஆயுதத்துடன் நின்றான். அப்போது அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை மந்திரம் சொல்லி பாண்டவர் படை மீது ஏவினான். அந்த அஸ்திரத்தில் இருந்து பெரும் காற்றில் வேகமாகப் பரவும் தீயைப்போல, அக்னி ஜுவாலை வெளிப்பட்டது. அதிலிருந்து இடி முழக்கம் போல சப்தம் வெளிப்பட்டது. அந்த அஸ்திரம் பாண்டவப்படையை நெருங்கிய உடன், அனைவரும் அதன் மீது கை வைத்து மிகுந்த பக்தியுடன் வணங்கினார்கள். உடனே அந்த அஸ்திரம் பூமியை நோக்கிப் …

Mahabharatham story in Tamil 94 – மகாபாரதம் கதை பகுதி 94

மகாபாரதம் பகுதி-94​ கிருஷ்ணா! உனக்கு தெரியாதது ஒன்றுமல்ல. பொய் சொல்வதால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், அன்பு, புகழ், செல்வம், பலம், பிரார்த்தனை பலன், தர்மம் முதலானவற்றால் சேர்த்த புண்ணியம்… இன்னும் எல்லாமே அழிந்து போகும் என்பது நீ அறியாததல்ல! மாயவனே! நீயே பொய் சொல்லத் துõண்டினால் உலகத்தில் தர்மம் என்னாகும்? என்றார் தர்மப்பிரபுவான தர்மராஜா. கடவுளே பொய் சொல்லத் துõண்டினாலும் கூட, அதிலுள்ள நியாய தர்மத்தை ஆராய்கிறான் மனிதனான தர்மன். மகாபாரதம் எவ்வளவு பெரிய நற்போதனையை மக்களுக்கு …

Mahabharatham story in Tamil 93 – மகாபாரதம் கதை பகுதி 93

மகாபாரதம் பகுதி-93 ​ அந்த வேலாயுதம் கடோத் கஜனின் மார்பைத் துளைத்து கொண்டு பறந்தது. மாபெரும் மலை சாயந்தது போல, கடோத் கஜன் தனது முகம் தரையில் படும் படியாக கீழே விழுந்து உயிர் விட்டான். இதுகண்டு பாண்டவர் படை அதிர்ச்சியடைந்தது. தங்களுடைய புத்திரன் இறந்தது குறித்து, பாண்டவர்களுக்கு பெரும் வருத்தம் உண்டானது. இப்போதும் கிருஷ்ண பரமாத்மாதான் பாண்டவர்களுக்கு கை கொடுக்க வேண்டியதாயிற்று. செயலிழந்து நின்ற பாண்டவர் களிடம், மைத்துனர்களே! விதிப் பயனை யாராலும் வெல்லமுடியாது. தத்துவ …

Mahabharatham story in Tamil 91– மகாபாரதம் கதை பகுதி 91

மகாபாரதம் பகுதி-91 ​ கண்ணபிரான் உடனே தனது பாஞ்சஜன்ய சங்கை ஊதினார். அதன் ஒலி கேட்டு களத்தில் நின்ற அனைவரும் அடங்கி நின்றனர். அப்போது, அர்ஜுனனிடம், அர்ஜுனா! கலங்காதே! இதோ இந்த வேலாயுதத்தை வைத்துக் கொள். முன்பொரு முறை பூமாதேவி இந்த வேலால் தான் நரகாசுரனைக் கொன்றாள். இது எத்தகைய கவசங்களையும் துளைக்கும் சக்தி வாய்ந்தது,என்று சொல்லிக் கொடுத்தார். அதைக் கொண்டு துரியோதனனை அர்ஜுனன் கொன்றிருக்கலாம், ஆனால், தன் அண்ணன் பீமன் செய்த சபதம் நினைவுக்கு வந்தது. …