அகரமுதல எழுத்தெல்லாம் | Agara Mudhala Eluthellam Song Lyrics

அகரமுதல எழுத்தெல்லாம் | Agara Mudhala Eluthellam Song Lyrics

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி (அகர)

ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி (அகர முதல)

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
(அகர முதல)

எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும், தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் பார்த்தது
யானை சேனை படையுடன் வேந்தது

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயிலாத பிள்ளையென்று வாயில்லாத
ஊமையென்று ஆயிரங்களான கல்வி
வாய்திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன் தேவி