வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil

இந்த பதிவில் திருவக்கரையில் குடி கொண்டு இருக்கும் வக்கிரகாளியம்மனின் கவசம் (Vakrakaliamman kavasam) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும் அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிர நிலை அடைந்து இருந்தால், திருவக்கரை வக்கிர காளியம்மனை வேண்டுதல் மிகவும் நன்மை பயக்கும். துன்பங்கள் நீங்க திருவக்கரை வக்கிரகாளியம்மன் கவசம் துதித்து தேவியை வழிபடுவோம்.

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil

ஓம் திருவக்கரை வாழும் செல்வியே போற்றி
ஓம் வக்கிரகாளி அம்மையே போற்றி
ஓம் நற்பவி மந்திர நாயகியே போற்றி

ஓம் திருவேற்காடுதுறை காளி மாரி தாயே போற்றி
ஓம் மாங்காட்டில் வாழும் காமாட்சி யன்னையே போன்றி
ஓம் மூன்றாம் கட்டளையமர்ந்த மூகாம்பிகை தாயே போற்றி
ஓம் பெரிய கருப்பூரில் ஆளும் சாமுண்டிக் காளியே போற்றி
ஓம் நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணுடைய நாயகியே போற்றி
ஓம் ராகுகால பூஜை ஏற்கும் துர்க்கையே போற்றி
போற்றி போற்றி ஜெகத்ரஷியே போற்றி
போற்றி போற்றி மகிஷாசுர மர்த்தினியே போற்றி
போற்றி போற்றி நற்பவி மந்திர நாயகியே போற்றி
போற்றி போற்றி வக்ர பத்ரகாளியே போற்றி

சிம்ம வாகினியே சிரசைக் காக்க
நெடுமால் சோதரி நெற்றியைக் காக்க
கஜமுகன் தாயே கண்களைக் காக்க
காளி மாதாவே காதினைக் காக்க
கால ராத்ரீயே கரங்களைக் காக்க
மகேஸ்வரியே மார்பினைக் காக்க
ஈசுவரித் தாயே இதயத்தைக் காக்க
வஜ்ரேஸ்வரியே வயிற்றினைக் காக்க
முண்டமாலினியே முதுகைக் காக்க
கோரரூபினியே குதத்தைக் காக்க
துர்க்கா தேவியே தொடையினைக் காக்க
கால கண்டிகையே காலினைக் காக்க

காக்க காக்க காளியே வருவாய்
கண்ணில் ஒளியைக் கண்ணமை தருவாள்
நாவல் நிறத்தை நாரணி தருவாள்
வாக்கினில் உண்மையை வக்கிரகாளி தருவாள்
மனதில் திடத்தை மாகேந்தரி தருவாள்.