திருப்புகழ் பாடல் 331 | Thiruppugazh Song 331

திருப்புகழ் பாடல் 331 – காஞ்சீபுரம் : அற்றைக் கற்றை | Thiruppugazh Song 331

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான

பாடல்:

அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத் – தருவோர்தாள்

அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக் – குடில்பேணிச்

செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் – பிறவாதே

செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக் – கழல்தாராய்

துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப் – பொரும்வேலா

சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் – கினியோனே

கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் – களைவோனே

கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிக் சொக்கப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !