Mahabharatham story in Tamil 89 – மகாபாரதம் கதை பகுதி 89

மகாபாரதம் பகுதி-89 ​ துரியோதனா! பிரம்மன் கூட சொன்ன சொல்லை சில சமயங் களில் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதைப் போலத் தான் நானும்! ஜயத்ரதனைக் காப்பாற்றுவேன் என்று உன்னிடம் வாக்களிப்பதை விட செயலில் நிரூபிக்கவே விரும்புகிறேன், என்றதும், துரியோதனன் படை வீரர்களை நோக்கி, மிக மிக பணிவாக, நாளை ஒரே ஒரு நாள். ஜயத்ரதனைப் பாதுகாத்து விட்டால் அர்ஜுனன் அழிவான். அதன்பின் வெற்றி நம் பக்கம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், என வேண்டிக்கொண்டான். கர்ணன், அஸ்வத்தாமன், …

Mahabharatham story in Tamil 88 – மகாபாரதம் கதை பகுதி 88

மகாபாரதம் பகுதி-88 ​ கடோத் கஜனுக்கு குழப்பமும் கோபமும் மேலிட்டது. இந்தப் பெரியப்பாவுக்கு என்னாச்சு! யாராவது எதிரியிடம் போய், நான் இன்னின்ன செய்யப் போகிறேன் என்று சொல்வார்களா? அவன் சுதாரித்துக் கொள்ள மாட்டானா? என்று யோசித்தவன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பெரியப்பா! தாங்கள் சொல்வது ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. நம் வலிமை பற்றி எதிரிக்குத் தெரிந்தால் அது அவனுக்கு சாதகமாக அல்லவா ஆகி விடும். நம் பலத்தை நாமே குறைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? அதிலும் அபிமன்யுவை வஞ்சகமாகக் …

Mahabharatham story in Tamil 87 – மகாபாரதம் கதை பகுதி 87

மகாபாரதம் பகுதி-87 ​ அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் …

Mahabharatham story in Tamil 86 – மகாபாரதம் கதை பகுதி 86

மகாபாரதம் பகுதி-86 ​ துரியோதனனுக்கு இப்போது இக்கட்டான நிலை. ஒரு சிறு பையன், இத்தனை பேரை அழிக்கிறான் என்றால், துரோணர், கிருபாச்சாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி போன்ற மாபெரும் சக்திகளையெல்லாம் புறமுதுகோடச் செய்கிறான் என்றால், அர்ஜுனன், பீமன் போன்ற மகாசக்திகளுக்கெல்லாம் நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையுடன் நின்ற போது, மாவீரன் கர்ணன் அவன் முன்னால் வந்தான். துரியோதனன் அவனிடம், கர்ணா! அபிமன்யு நம்மவரை துவம்சம் செய்கிறான். இப்போது அர்ஜுனன் அவன் அருகில் இல்லை. அவனும், …

Mahabharatham story in Tamil 85 – மகாபாரதம் கதை பகுதி 85

மகாபாரதம் பகுதி-85 ​ அவன் பல வலிமையான பாணங்களால் அபிமன்யுவைக் காயப்படுத்தினான். ஆனால், அபிமன்யு தன் உடலில் இருந்து கொட்டும் குருதி கண்டு மிகுந்த ஆனந்தமும் ஆவேசமும் அடைந்து கர்ணனை நோக்கி விட்ட அம்புகள் அவனை நிலைகுலையச் செய்தன. கர்ணன் தன் தேருடன் தோற்றோடினான். பின்னர் கிருபாசாரியார் அபிமன்யுவுடன் போர்செய்ய வந்தார். அத்துடன் சகுனி, அவனது மகன் ஆகியோர் அவனைச் சூழவே, கோபமடைந்த அபிமன்யு ஒரு பாணத்தை விட அது சகுனியின் மகனின் தலையை அறுத்தெறிந்தது. சகுனி …

Mahabharatham story in Tamil 84 – மகாபாரதம் கதை பகுதி 84

மகாபாரதம் பகுதி-84 ​ பகவான் நாராயணனின் அவதாரமான அந்தக் கிருஷ்ணன் மீது பகதத்தன் தொடர்ந்து அம்புகளை விடுத்தான். அந்த அம்புகள் கிருஷ்ணனின் ஸ்பரிசம் படுவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, கிருஷ்ணனின் உடலில் மாலை போன்ற வடிவில் போய் விழுந்தன. அந்த அம்புமாலையைத் தாங்கிய கிருஷ்ணரின் அழகை தேவர்கள் வானுலகில் இருந்தபடி புகழ்ந்தனர். உலக உயிர்கள் பகவானின் மீது பல துõஷணைகளைச் செய்கின்றன. நீ ஆண்டவனா? உனக்கு கண் இருக்கா? காது இருக்கா? என்றெல்லாம் நாம் கூட …

Mahabharatham story in Tamil 83 – மகாபாரதம் கதை பகுதி 83

மகாபாரதம் பகுதி-83 ​ ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. அர்ஜுனன், திருஷ்டத்யும்னன் முதலானோரின் அம்புகளுக்கு எதிரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. கவுரவப்படைகள் பின்வாங்கின. முக்கிய அரசர்களெல்லாம் புறமுதுகிட்டு ஓடினர். துரோணரால் இதைத் தாங்க முடியவில்லை. முப்பதாயிரம் படைவீரர்கள் சூழ, அவர் அர்ஜுனனைத் தாக்குவதற்காக முன்னேறி வந்தார். அவரது அம்பு மழையை தாக்குப்பிடிக்க முயன்ற நகுல, சகாதேவர்கள் அது முடியாமல் போனதால் புறமுதுகிட்டு ஓடினர். எப்படியோ தர்மரை நெருங்கி விட்டார் துரோணர். இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அப்போது தர்மர் …

Mahabharatham story in Tamil 82 – மகாபாரதம் கதை பகுதி 82

மகாபாரதம் பகுதி – 82 ​ கர்ணா! தவறாக நினைக்காதே! நீ சேனாதிபதியாகி விட்டால், போரின் பெரும் பொறுப்பு உனக்கு வந்துவிடும். என் அருகில் இருக்க உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? என்னைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக் கிறேன், என்றான். கர்ணனும் சரியென ஒப்புக்கொண்டான். பின்பு துரோணச்சாரியாரை தனது படையின் சேனாதிபதியாக்கினான். பத்துநாட்கள் பீஷ்மர் போர் புரிந்து அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்பார்த்து படுத்திருந்த வேளையில், துரோணர் வில்லெடுத்தார். பதினோராம் நாள் போர் துவங்கியது. …

Mahabharatham story in Tamil 81 – மகாபாரதம் கதை பகுதி 81

மகாபாரதம் பகுதி – 81​காரணம் இல்லாமல் கடவுள் காரியம் எதையும் செய்வதில்லை. கிருஷ்ண பகவானின் சங்கொலி, போர் வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் அதிபயங்கர சப்தமாய் ஒலிக்க, பீஷ்மரின் காதில் அது தேனாய் பாய்ந்தது. உயிர் போகும் தருணத்தில் மனிதனுக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. எப்படி உயிர் போகிறதோ, அதற்கு தகுந்தாற் போன்ற வலியும் ஏற்பட்டு துடிக்க வைக்கும். பீஷ்மரின் உடலில் அர்ஜுனன் பாய்ச்சிய ஏராளமான அம்புகள் பெரும் வலியை உண்டாக்கியது. அந்த மகாத்மா அதைப் பொறுத்துக் கொண்டார். …