Thayumanavar Songs – காடுங்கரையும்

காடுங்கரையும் காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே ஓடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவா யுயிர்க்குயிராய் ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்தீரே. 1. சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. 2. காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் …

Thayumanavar Songs – ஏசற்ற அந்நிலை

ஏசற்ற அந்நிலை ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமேஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே. 1. பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும்ஆழாழி இன்பத் தழுந்தப் படியாயோதாழாயோ எந்தையருள் தாள்கீழ்நெஞ் சேஎனைப்போல்வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாயே. 2. இருப்பாய் இருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக்குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோஅருட்பாய் நமக்காக ஆளவந்தார் பொன்னடிக்கீழ்மருட்பேயர் போலிருக்க வாகண்டாய் வஞ்சநெஞ்சே. 3. வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்துகொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோஅஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த …

Thayumanavar Songs – கல்லாலின்

கல்லாலின் கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்குங்கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால்சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மைதுரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றோ. 1. அன்றோஆ மோஎனவுஞ் சமய கோடிஅத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரேநின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கேநின்னருள்கொண் டறிவதல்லால் நெறிவே றுண்டோ. 2. நெறிபார்க்கின் நின்னையன்றி அகிலம் வேறோநிலநீர்தீக் கால்வானும் நீய லாதகுறியாதும் இல்லையென்றால் யாங்கள் வேறோகோதையொரு கூறுடையாய் கூறாய் கூறாய். 3. கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக்குணமிலா மனமெனும்பேய்க் குரங்கின் பின்னேமாறாத கவலையுடன் சுழல என்னைவைத்தனையே பரமேநின் மகிமை …

Thayumanavar Songs – உடல்பொய்யுறவு

உடல்பொய்யுறவு உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக்கடவாரார் தண்ணருளே கண்டாய் – திடமுடனேஉற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப்பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ். 1. பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்சீராக நிற்குந் திறங்கண்டாய் – நேராகநிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால்கற்குநெறி யாதினிமேற் காண். 2. மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்பொய்யான தன்மை பொருந்துமோ – ஐயாவேமன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமைஎன்னும்நிலை எய்துமா றென். 3. அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங்குறியேற் கறிவென்ற கோலம் – வறிதேயாம்நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென்றேயெனக்கோர் நாமமிட்ட …

Thayumanavar Songs – பாயப்புலி

பாயப்புலி பாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகிலமாயைப் பெரும்படைக்கேஇலக் காவெனை வைத்தனையோநீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணைதாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே. 1. தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்துநிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங்கற்பரந் தாங்குக் கரைந்திட வானொத்த காட்சிநல்கும்பொற்பர மாயென் வினைக்கருந் தாதைப் பொடிசெய்ததே. 2. செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கேகொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனேகையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகிஉய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே. 3. அத்தனைச் …

Thayumanavar Songs – மண்டலத்தின்

மண்டலத்தின் மண்டலத்தின் மிசையொருவன் செய்வித்தைஅகோவெனவும் வார ணாதிஅண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில்நிறுத்துமவ தானம் போலஎண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன்அருள்வெளியில் இலக வைத்துக்கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும்நிச்சயிக்கக் கூடா ஒன்றை. 1. ஒன்றிரண்டாய் விவகரிக்கும் விவகாரங்கடந்தேழாம் யோக பூமிநின்றுதெளிந் தவர்பேசா மௌன நியாயத்தைநிறை நிறைவைத் தன்னைஅன்றியொரு பொருளிலதாய் எப்பொருட்கும்தான்முதலாய் அசல மாகிஎன்றுமுள்ள இன்பத்தைத் தண்ணென்றசாந்தபத இயற்கை தன்னை. 2. பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலானஞானபதப் பரிசு காட்டிச்சதமாகி நிராலம்ப சாட்சியதாய்ஆரம்பத் தன்மை யாகிவிதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக்கீண்டெழுந்து விமல மாகிமதமாறுங் காணாத ஆனந்தசாகரத்தை மௌன வாழ்வை. …

Thayumanavar Songs – எனக்கெனச் செயல்

எனக்கெனச் செயல் எனக்கெ னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீநினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். 1. உளவ றிந்தெலாம் நின்செய லாமென வுணர்ந்தோர்க்களவி லானந்தம் அளித்தனை அறிவிலாப் புன்மைக்களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். 2. என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழைதன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய்பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர்நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். …

Thayumanavar Songs – ஆசையெனும்

ஆசையெனும் ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்செனவும்மன தலையுங் காலம்மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்டதுந்தூர்ந்து முத்திக் கானநேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்கொடுமைபற்றி நிற்பர் அந்தோதேசுபழுத் தருள்பழுத்த பராபரமேநிராசையின்றேல் தெய்வமுண்டோ. 1. இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட்டருள்செயென ஏசற் றேதான்புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல்எங்குநிறை பொருளே கேளாய்மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட்டிரங்கெனவே மௌனத் தோடந்தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோபராபரமே சகச நிட்டை. 2. சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமேதேட்டமொன் றறஅருட் செயலில் நிற்றியேல்விட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே. 3. தன்னெஞ்ச நினைப்பொழியா தறிவிலிநான்ஞானமெனுந் தன்மை …

Thayumanavar Songs – தன்னையொருவர்

23. தன்னையொருவர் தன்னை யொருவர்க் கறிவரிதாய்த்தானே தானாய் எங்குநிறைந்துன்னற்கரிய பரவெளியாய்உலவா அமுதாய் ஒளிவிளக்காய்என்னுட் கலந்தாய் யானறியாதிருந்தாய் இறைவா இனியேனும்நின்னைப் பெருமா றெனக்கருளாம்நிலையைக் கொடுக்க நினையாயோ. 1. நினையு நினைவுக் கெட்டாதநெறிபெற் றுணர்ந்த நெறியாளர்வினையைக் கரைக்கும் பரமஇன்பவெள்ளப் பெருக்கே நினதருளால்மனைவி புதல்வர் அன்னைபிதாமாடு வீடென் றிடுமயக்கந்தனையும் மறந்திங் குனைமறவாத்தன்மை வருமோ தமியேற்கே. 2. வரும்போம் என்னும் இருநிலைமைமன்னா தொருதன் மைத்தாகிக்கரும்போ தேனோ முக்கனியோஎன்ன என்னுள் கலந்துநலந்தரும்பே ரின்பப் பொருளேநின்தன்னை நினைந்து நெக்குருகேன்இரும்போ கல்லோ மரமோஎன்இதயம் யாதென் றறியேனே. 3. …