Eswariye Mahamaye – Lord Mariyamman Songs

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க – வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு
உன்னை அன்றி வேறு கதி – ஏதம்மா
(ஈஸ்வரியே மகமாயி)

சமயபுரம் சன்னதியின் வாசலிலே – லோக
சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் – நாங்க
கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் – சிங்க
வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் – இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)

படவேட்டு எல்லையிலே குடி இருப்பாய் – நல்ல
பத்தினிகள் மஞ்சளுக்குத் துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே – அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே
(ஈஸ்வரியே மகமாயி)