விடபமுனி அருளிய சிவகவசம் | Shiva Kavacham

விடபமுனி அருளிய சிவகவசம் – பஞ்சமா பாதங்கள், பகைகள், வறுமை நீங்க

பங்கயத் தவிசின் மேவி இருந்துடல் பற்று நீங்கி அங்கு நற்பூத சுத்தி அடைவுடன் செய்த பின்னர் கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனை பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே

அகில நாயகனாய் ஞான ஆனந்த ரூபியாகித் துகள் தரும் அனுவாய் வெற்பின் தோற்றமாம் உயிரை எல்லாம் தகவுடன் அவனியாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க!

குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித் தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடா வண்ணம் காப்போன் நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்யும் விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க!

கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுட் தீயால் நடலை செய்து அமலைதாளம் அறைதர நடிக்கும் ஈசன் இடைநெறி வளை தாபத்தில் எறிதரு சூறைக் காற்றில் தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க!

தூய கண் மூன்றினோடு சுடரும்பொன் வதனம் நான்கும் பாயும் மான் மழுவினோடு பகர் வரத அபயங்கள் மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின் அனைய தேசும் ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனில் காக்க!

மான்மழு சூலம்தோட்டி வனைதரும் அக்க மாலை கூன்மலி அங்குசம் தீ தம்ருகம் கொண்ட செங்கை நான்முகம் முக்கண் நீல நள்ளிருள் வண்ணங் கொண்டே ஆன்வரும் அகோர மூர்த்தி தந்திசை அதனில் காக்க!

திவண்மறி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தோடு அபயம் தாங்கக் கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும் தவளாமாமேனிச் சத்தியோசாதம் மேல் திசையில் காக்க!

கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம் அறை தரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப் பொறைகொள் நான்முகத்தி முக்கட் பொன்னிற மேனியோடு மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனில் காக்க!

அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள் சங்கு மான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித் திங்களில் தவள மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற எங்கள் ஈசான தேவன் இரு விசிம்பெங்கும் காக்க!

சந்திரமௌலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி மைந்து உறுபகன் கண் தொட்டோன் வரி விழிகில நாதன் கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி அந்தில் செங்கபோலந் தூய ஐம்முகன் வதனம் முற்றும்

வளமறை பயிலும் நாவன் நாமணி நீலகண்டன் களமடு பினாகபாணி கையினை தருமவாகு கிளர்புயம் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய ஒளி தரு மேரு வில்லி உதர மன்மதனைக் காய்ந்தோன்

இடை இபமுகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும் புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம் படர் சகதீசன் மன்னும் பாய்தரும் இடபகேது மிடைதரு கணைக்கால் எந்தை விமலன் செம்பாதம் காக்க!

வருபகல் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் பொறுவறு வாமதேவன் புகன்றிடு மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை திரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணியாற இனிது காக்க!

கங்குலின் முதல் யாமத்துக்துக் கலைமதி முடிந்தோன் காக்க! தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க! பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க! பங்கமில் நாலாம் யாமம் கௌரிதன் பதியே காக்க!

அனைத்துள காலம் எல்லாம் அந்தற் கடிந்தோனுள்ளும் தனிப்பெரு முதலாய் நின்ற சங்கரன் புறமும் தானு வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும் நினைத்திடற்கரிய நோன்மைச் சதாசிவ நிமலன் காக்க!

நிற்புழிப் புவன நாதன் ஏகுழி நிமல மேனிப் பொற்பிரமன் ஆதி நாதன் இருப்புழிப் பொருவிலாத அற்புத வேத வேத்தியன் அருந்துயில் கொள்ளும் ஆங்கண் தற்பல சிவன் வழிக்கு சாமள ருத்திரன் காக்க!

மலைமுதல் துருக்கம் தம்மில் புராரி காத்திடுக மன்னும் சிலைவலி வேடரூபன் செறிந்த கானகத்தில் காக்க! கொலையமர் கற்பத் தண்ட கோடிகள் குலுங்க நக்குப் பலபடி நடிக்கும் வீரபத்திரன் முழுதும் காக்க!

பல்லுளைப் புரவித் திண்தேர் படுமதக்களிறு பாய்மா வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்திடும் எண்ணில் கோடி கொல்லியன் மாலை வைவேல் குறுகலர் குறுங்காலை வல்லியோர் பங்கன் செங்கை மழுப்படை துணித்துக் காக்க!

தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப் பைந்தலை நெடிய பாந்தள் பஃறலை அனைத்துந் தேய்ந்து முத்தலை படைத்த தொக்கும் மூரிவெங்கனல் கொள்சூலம் பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க!

முடங்களை முதலாய் உள்ள முழுவலிக் கொடிய மாக்கள் அடங்கலம் பினாகம் கொல்க என்றிவை அனைத்தும் உள்ளம் தடம்பட நினைந்து பாவம் செயும் சிவகசம் தன்னை உடன்பட தரிப்பையானால் உலம் பெருகுவுவ தோளாய்

பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும் அஞ்சலில் மறலியும் அஞ்சி ஆட்செயும் வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும் தஞ்சமென்றிதனை நீ தரித்தல் வேண்டுமால் சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!