அட்சய திருதியை அன்று பல்லி

அட்சய திருதியை அன்று பல்லி

மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திரிதியயை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத வளர்பிறையில் கொண்டாடுகின்றோம். அத்தகைய அட்சய திருதியை நாளுக்கும் பல்லிகளுக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது.அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது தங்கம் தான். ஆனால் பல்லிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு? தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அட்சய திருதியை நாளில் மட்டும் இந்த பல்லிகள் யார் கண்ணுக்கும் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து பகவான் கட்டளையிட்டு உள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஸ்து பகவானின் கட்டளைக்கிணங்க எல்லா பல்லிகளும் இன்று கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருக்குமாம்.

இதனால் வீட்டில் உள்ளவர்களால் இந்த பல்லியை இன்றைய தினம் மட்டும் காண முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி உங்கள் கண்களில் ஒரு பல்லியேனும் தென்பட்டு விட்டால் உங்களது ஏழேழு ஜன்மத்து பாவமும், உங்களை பிடித்த தரித்திரமும் விலகும் என்று நம்பப்படுகிறது.

இவ்வருடம் அக்ஷய திருதியை நாளில் பல்லியை உங்களுடைய கண்களுக்கு காட்ட வேண்டும் என்று அந்த வாஸ்து பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நாம் செய்த பாவத்திற்கான தண்டனை குறைய வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டு, இன்றைய தினம் பல்லியை தரிசனம் செய்துதான் பாருங்களேன்.