Tag «அன்பர் நெறி»

Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அன்பர் நெறி

அன்பர் நெறி அத்துவா எல்லாம் அடங்கச்சோ தித்தபடிச்சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ. 1. மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப்பேச்சற்றோர் பெற்றஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ. 2. கோட்டாலை யான குணமிறந்த நிர்க்குணத்தோர்தேட்டாலே தேடுபொருள் சேருநாள் தெந்நாளோ. 3. கெடுத்தே பசுத்துவத்தைக் கேடிலா ஆனந்தம்அடுத்தோ ரடுத்தபொருட் கார்வம்வைப்ப தெந்நாளோ. 4. கற்கண்டால் ஓடுகின்ற காக்கைபோல் பொய்ம்மாயச்சொற்கண்டால் ஓடும்அன்பர் தோய்வறிவ தெந்நாளோ. 5. மெய்த்தகுலங் கல்விபுனை வேடமெலாம் ஓடவிட்டசித்தரொன்றுஞ் சேராச் செயலறிவ தெந்நாளோ. 6. குற்றச் சமயக் குறும்படர்ந்து தற்போதம்அற்றவர்கட் கற்றபொருட் …