Vela Vadi Vela

வேலவா வடி வேலவா

வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா அன்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா – ஆடிவா
சிங்கார வேலுடனே ஓடிவா-ஓடிவா
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா- உன்னை
சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா (வேலவா வடி வேலவா)

முத்தே ரத்தினமே முருகையா-முருகையா
முழுமதி முகத்தவனே கந்தையா – கந்தையா
முத்தகனே வினை தீர்க்கும் வேலையா
வடி வேலையா உன் கையில் வேலையா
அந்த வெள்ளிமலை நாதன் பெற்ற சின்னையா (வேலவா வடி வேலவா)