Aiya Unaiye Paninthene – Ayyappan Bajanai Songs

ஐயா உனையே பணிந்தேனே
ஆறுதல் வழங்கி அருள்வாயே
மனமே உரகிடப் பாடுகின்றேன்
மாமலை ஜோதியே சரணமய்யா (ஐயா)

உள்ளத்தில் அமைதியும் உடலினில் உறுதியும்
நல்லதே நினைவினில் வேண்டுமய்யா
கற்பகத் தருவாகி கருணையில் கடலாகி
வரம் தந்து நீயே காத்திடய்யா
சொந்தபந்தம் யாவும் நீயே சொல்லும் சுகங்கள் யாவும் நீயே
வளம் நலம் தருவாய் நீயே வாராய்தேவா (ஐயா)

தொட்டதுதுலங்கிடவும் சொல்லினில் அருள் வேண்டும்
தித்தித்திடும் நினைவு தினம் வேண்டும்
பக்தியுடன் உனைப்பாட பக்தனுக்கு வேண்டியதை
பரிவுடன் அருள்வாய் பகவானே
கல்லும் முள்ளும் எனக்கு மெத்தை காடும் மலையும் எனக்குசோலை
மதியும் மகிழ்வும் தருவாய் நீயே வாராய் தேவா (ஐயா)