பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 1 – பால் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil

பாகம் 1 – பால்:

சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.

இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது

என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண்திண்திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது

ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு
எலும்புறும் தலைகளும் துணிந்திட

அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே

துலங்குமஞ்சிறை அலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்திருந்து உயர்கரங்கண்மா
வரங்கள் மிஞ்சிய விரும்புகூர்

துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே

சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண்திணிவேல்
தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா
துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா

சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்
உகந்த சுந்தர அலங்க்ருதா . . . . . . அரிபிரமருமேயோ

அலைந்து சந்ததம் அறிந்திடாது
எழுந்த செந்தழல் உடம்பினார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே

புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா
அங்கிங் கென்பது அறுந்தேவா
எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே

இன்பம் தந்தருளும் தாளா
ஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா

அலர்ந்த இந்துள அலங்கலும் கடி
செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட
வளர்ந்த பந்தனண எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா

குலுங்கிரண்டு முகையும்களார்
இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல்

குரங்கும் அம்பகம் அதும் செவாய்
அதும் சமைந்துள மடந்தைமார்

கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்
சண்டன் செயலும் சூடே

கொண்டு அங்கம் படரும் சீழ்நோய்
அண்டம் தந்தம் விழும்பாழ் நோய்

கூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்
கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே

குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை
அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம்
நினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே