வேல் மாறல் மஹா மந்திரம் | Vel Maaral Maha Manthiram

Vel Maaral Maha Manthiram | வேல் மாறல் மஹா மந்திரம்

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் )
( பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற இடத்தில் மேற்கண்ட முழு
அடியையும் கூறவேண்டும் )

  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் (திரு )
  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு )
  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு )
  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் (திரு )
  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு )
  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு )
  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு )
  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு )
  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு )
  10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு )
  11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் (திரு )
  12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு )
  13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு )
  14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு )
  15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் (திரு )
  16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு )
  17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் (திரு )
  18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு )
  19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு )
  20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு )
  21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் (திரு )
  22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு )
  23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு )
  24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு )
  25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு )
  26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு )
  27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு )
  28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு )
  29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு )
  30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் (திரு )
  31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் (திரு )
  32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு )
  33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் (திரு )
  34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு )
  35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு )
  36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் (திரு )
  37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு )
  38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு )
  39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு )
  40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு )
  41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு )
  42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் (திரு )
  43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு )
  44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு )
  45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு )
  46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் (திரு )
  47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு )
  48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு )
  49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
    அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு )
  50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
    நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு )
  51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை
    எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு )
  52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
    இடுக்கண்வினை சாடும் (திரு )
  53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்த(து)என முகட்டின்இடை
    பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு )
  54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்(கு)உருகி
    வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு )
  55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
    வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
    அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு )
  56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
    ஒளிப்பிரபை வீசும் (திரு )
  57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
    கடித்துவிழி விழித்(து)அலற மோதும் (திரு )
  58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
    களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு )
  59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை(வு) ஆகும் (திரு )
  60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
    எனக்(கு)ஓர் துணை ஆகும் (திரு )
  61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு )
  62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
    விழிக்குநிகர் ஆகும் (திரு )
  63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிகர் ஆகும் (திரு )
  64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்(து)எறிய
    உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு )
  65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு )

( முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் )

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணுவாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் ம் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.

வேலும் மயிலும் துணை