Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs

Pullankulal Kodutha Munkilkale – Lord Krishna Songs

புல்லாங்குழல் கொடுத்த‌ மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)

 

வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் )

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )