Thiruppugazh Song 111 – திருப்புகழ் பாடல் 111

திருப்புகழ் பாடல் 111 – பழநி

தனதனா தனதத்த தனதனா தனதத்த
தனதனா தனதத்த …… தனதான

அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து …… விலைபேசி

அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை …… வளையாலே

உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த …… மடவாரோ

டுருகியே வருபெற்றி மதனா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி …… தரவேணும்

மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை …… மணிமார்பா

மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர …… வடிவேலா

பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி …… யெமதாயி

பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற …… பெருமாளே.