திருப்புகழ் பாடல் 230 – சுவாமி மலை
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த …… தனதான
மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் …… விரகாலே
மயலே யெழுப்பி யிதழே யருத்த
மலைபோல் முலைக்கு …… ளுறவாகிப்
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச …… மறவாதே
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற …… அருள்வாயே
குருவா யரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி …… மணவாளா
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு …… மிளையோனே
திருமால் தனக்கு மருகா வரக்கர்
சிரமே துணித்த …… பெருமாளே.