Thiruppugazh Song 92 – திருப்புகழ் பாடல் 92

திருப்புகழ் பாடல் 92 – திருச்செந்தூர்

தனன தந்த தந்த தனன தந்த தந்த
தனன தந்த தந்த …… தனதான

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த …… கனிவாயும்

முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி …… விழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு …… குறுவேர்வும்

தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று …… திரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை …… வடிவேலா

வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த …… புயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச …… மலர்மீதே

அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த …… பெருமாளே.