Aanai Alaiyura Neelimalai – Ayyappan Songs

ஆனை அலையுற நீலிமலை நம்ம ஐப்பனோட சாமிமலை
ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்திவிடுற சபரிமலை
ஐயப்பனைத் தொழுவோம் கோயிலுக்கு வருவோம்
சாமியப்பா சரணமப்பா பம்பாவாசனே சரணமப்பா
சாமியப்பா சரணமப்பா பம்பாவாசனே சரணமப்பா (ஆனை)

வீட்டுல நாட்டுல காட்டுல மேட்டுல பாட்டுல வாழும் பகவானே

சாமியே சரணம் ஐயப்ப சரணம்
நல்லதவத்தில உள்ளமனத்தில் போற்றிவணங்கவருவோனே
சாமியே சரணம் ஐயப்ப சரணம்
கேட்டவரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே

சாமிதிந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பன் திந்தகத்தோம் திந்தகத்தோம் (ஆனை)

உன்திரு நாமத்தை சொல்லியபேருக்கு துன்பங்கள்
என்னைக்கும் தொடராது
சாமியே சரணம் ஐயப்பசரணம்
பண்ணின பாவங்கள் பந்தளவாசனின்
பார்வையில்படப்படராது

 

சாமியே சரணம் ஐயப்பசரணம்
எண்ணின நன்மைங்க எப்போதும் துலங்கும் என்னைக்குமே அதுமாறாது

 

சாமி திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பன் திந்தகத்தோம் திந்தகத்தோம் (ஆனை)